வாசுகி முருகேசன் மறைவு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கரூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த வாசுகி முருகேசன்(46), நேற்று முன்தினம் கோவை சூலூர் அருகே கார் விபத்தில் இறந்தார். அவரது உடல், கரூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான தளவாபளையத்திற்கு எடுத்து வரப்பட்டது.

பொது மக்கள் அஞ்சலிக்காக நேற்று அவரது வீட்டில், உடல் வைக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சாந்தா ஸ்டாலின், கனிமொழி எம்.பி, மற்றும் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அமைச்சர்களும், மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, நெப்போலியன் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது வாசுகியின் கணவர் முருகேசன் மற்றும் குழந்தைகளை துணை முதல்வர் ஸ்டாலின் கட்டிப் பிடித்து கதறி அழுதார். இதை பார்த்து அங்கு திரண்டிருந்த திமுகவினரும் கதறி அழுதனர். பின்னர், வாசுகி முருகேசனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிழக்கு தளவாபாளையத்தில் உள்ள காவிரியாற்றங்கரையில் 12.30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
அவரது மகன் விக்னேஷ்வரன் சிதைக்கு தீ மூட்டினார். தொடர்ந்து நடந்த இரங்கல் கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பேசினர்.

0 comments: