கனமழை பெய்வதால் பள்ளிகள் செயல்படக்கூடாது

தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்வதால் பள்ளி, கல்லூரிகள் கட்டாயமாக செயல்படக்கூடாது, என கலெக்டர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்டா மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 25ம் தேதி பலத்த மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்யாத போதிலும், பெரும்பாலான பள்ளிகள் மதியத்துக்கு மேல் விடுமுறை விடுக்கப்பட்டது. நேற்று கடும் மழை பெய்யும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுக்கப்படுவதாக கலெக்டர் சண்முகம் அறிவித்தார். இருப்பினும், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், சில அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு வகுப்பு நேற்று நடந்தது. நேற்று கலெக்டர் சண்முகம் கூறுகையில், ""கனமழை தொடர்வதால் கட்டாயமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 27, 28ம் தேதி விடுமுறை விடுக்கப்படுகிறது. அன்றைய தேதியில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் எந்த கல்வி நிறுவனமும் வகுப்புகள் நடத்தக்கூடாது,'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின

வடமேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும், இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

வயல்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. 4-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பிற்பகல் 2 மணி வரை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.


இந்த மழை காரணமாக திருவாரூரில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. திருவாரூர் காட்டுக்காரத்தெரு, மன்னார்குடி அசேஷம் பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது.


நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. நாகை மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.


மேலும் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (47) என்ற விவசாயி குளிர் தாங்காமல் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். கடமடை பாசன ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தலைஞாயிறு, கீழையூர் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் நீரில் மூழ்கி விட்டன. பயிர் சேதம் பற்றி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்.

கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி,


’’இலங்கையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்’’என்று தெரிவித்துள்ளார்.

ஆசிட் வீசினால், ஆயுள் தண்டனை!

ஆசிட் வீசி தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

முகத்தில் திராவகம் (`ஆசிட்') வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற இளம்பெண், இந்த குற்றத்துக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். லட்சுமி சிறுமியாக இருந்த போது நடந்த இந்த தாக்குதலில் அவருடைய முகம் சிதைந்ததுடன், கண் பார்வையும் பறி போனது.


பெரும்பாலும் இளம்பெண்கள்தான் இந்த குற்றத்தினால் பாதிக்கப்படுவதால், அந்த பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் சட்ட விதிகளில் வகை செய்ய வேண்டும் என்றும் லட்சுமி தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, `ஆசிட் 'வீச்சு குற்றத்துக்கு தண்டனையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு தரப்பில் மெத்தனமாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது.


இது கொலை குற்றத்தை விட மோசமானது என்பதால், இந்திய தண்டனை சட்டம் 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கொண்டு வரும் படியும் மத்திய அரசை வற்புறுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவதற்காக, நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.


மத்திய உள் துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தலைமையிலான அந்த குழு, `ஆசிட்' வீசும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல், அதிக பட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்று, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.


அத்துடன் குற்றவாளிகளுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு உதவி தொகையாக வழங்கலாம் என்றும் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக, சுப்ரீம் கோர்ட்டு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

தென் மாவட்டங்களில் தொடர் மழை

தமிழகத்தின் தென் மாவட்டஙகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடிப்பதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வைகை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் , திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக மழை விட்டு, விட்டும், சில பகுதிகளில் தொடர்ந்தும் பெய்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இரவில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லையென்றாலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாடக்குளம் கண்மாய் மாறுகால் பாய்கிறது. வைகை அணை 71 அடி நிரம்பி விட்டதால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மதுரையில் ஆரப்பாளையம் , யானைக்கல் உள்ளிட்ட தரைப்பாலங்கள் மூழ்கின. மதுரை வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை பார்க்க பலர் குடும்பத்தினருடன் வந்தனர்.



வைகை அணையின் நீர் மட்டம் : தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலான மழை பெய்தது. அணைப்பகுதியில் நல்ல மழை காரணமாக நீர்வரத்து கணிசமாக உள்ளது. வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 69.59 ( மொத்தம் அணையின் கொள்ளளவு 71 அடி ) இந்த அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 046 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 2 ஆயிரத்து 46 கன அடி நீர் வெளியேறுகிறது.


அணையின் நீர் இருப்பு 50 ஆயிரத்து 721 மில்லியன் கன அடியாகும். பெரியார் அணை நீர் மட்டம் 127 அடியாக உயர்ந்திருக்கிறது. ( மொத்தம் கொள்ளளவு 136 அடி) . இந்த அணைக்கு 2 ஆயிரத்து 555 கன அடி நீர் வரத்து உள்ளது. நீர் இருப்பு மொத்தம் 4 ஆயிரத்து 50 மில்லியன் கன அடி ஆகும். பெரியாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது.


ராமநாதபுரத்தில் பெரிகண்மாய் நிரம்புகிறது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மப்பும் , மந்தாரமுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய பெரிகண்மாய் 60 சதம் நிரம்பியிருக்கிறது. இதன் காரணமாக அருகில் உள்ள காருக்குடி கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழை நிலை இதே அளவு இருக்குமானால் இந்த கண்மாய் நிரம்பி விடும் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பெரிய கண்மாய் மண்டபத்தில் அதிப்பட்சமாக 207 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. திருவாடானை உள்பட 15 வீடுகள் இடிந்துள்ளன. நீரை வெளியேற்றும் பணியில் வருவாய், நகராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சாரலுடன் கூடிய மழை பெய்தது.இளையான்இடி அருகே உள்ள தாயமங்கலம் கண்மாய் நிரம்பியது. இதன் காரணமாக அருகில் உள்ள அகதி முகாமிற்குள் நீர் புகுந்தது. மறவமங்கலம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது.



பள்ளிகளுக்கு விடுமுறை: மழை காரணமாக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் அணை நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அம்பாசமுத்திரம் மணியாச்சி பகுதியில் அதிகப்பட்சமாக 7 செ.மீட்டர் மழை பதிவாகியது.

போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல்

போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குகள் வரும் சனிக்கிழமை எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை மூலமாக ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில், தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் ஒரே சங்கத்துடன் மட்டும் பேச்சு நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த நிலையில், இதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், 1.25 லட்சம் தொழிலாளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கென மாநிலம் முழுவதும் 270 மையங்கள் அமைக்கப்படுகிறது. காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.


தேர்தலைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் ஹாதியும், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையாளர் மதன்மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை குரோம்பேட்டையில் பணிமனைக்குக் கொண்டு வரப்பட்டு வரும் சனிக்கிழமை எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


இந்தத் தேர்தலில் 13 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன. திமுகவின் ஆதரவு பெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அதிமுக ஆதரவு பெற்ற அண்ணா தொழிற்சங்கம், இடதுசாரிகளின் சி.ஐ.டி.யு., ஆகிய மூன்று தொழிற்சங்கங்களுக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சென்டிரல்-நெல்லை சிறப்பு ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது

சென்னை: பயணிகளின் வசதிக்காகவும், கூட்டநெரிசலை குறைப்பதற்காகவும் வரும் 17-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் சிறப்பு ரயில் (வ.எண். 06013) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். இதேபோன்று வரும் 18-ம் தேதி முதல் அடுத்த மாதம் 16-ம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வியாழக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (06014) இயக்கப்படுகிறது. இச்சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இது சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம் , சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

பலஸ்தீன் சிறுவர்கள்மீது தொடரும் இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனம்


ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தில் உள்ள சில்வான் பிரதேசக் குடியிருப்புப் பகுதியைத் திடீரெனச் சுற்றிவளைத்துக் கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் படை அங்குள்ள பலஸ்தீன் சிறுவர்கள் பலரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

சில்வானின் பத்ன் அல் ஹவா குடியிருப்பில் உள்ள பலஸ்தீன் வீடுகளுக்குள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அனுசரணையுடன் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் படை சிறுவர்களின் பெற்றோரை அடித்து இம்சித்ததோடு, அவர்களின் கண்ணெதிரிலேயே குழந்தைகளின் கைகளையும் கண்களையும் கட்டி இராணுவ ஜீப்களில் மஸ்கொபெஹ் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் படையினரால் சட்டவிரோதமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ள இச் சிறுவர்கள் அனைவரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை இந்தப் பிரதேசத்தில் அடிக்கடி அத்துமீறி நுழைந்து பலஸ்தீன் பொதுமக்களையும் சிறுவர்களையும் கைதுசெய்து தடுப்பு முகாம்களில் அடைத்து வருவது சர்வசாதாரணமான நிகழ்வுதான் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 33 பலஸ்தீன் சிறுவர்கள் இப்பிரதேசத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் என அண்மைய அறிக்கையொன்று குறிப்பிடுகின்றது.

கோவை என்கவுண்டர் எதிரொலி! சென்னை சிறுவனை கடத்தியவர்கள் கதறல்!

சென்னை: கோவை என்கவுண்டரில் மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேட்டதும் சென்னையில் சிறுவன் கீர்த்திவாசனை கடத்திய வழக்கில் பிடிபட்ட பிரபு, விஜய் இருவரும் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கோவையில் சிறுவர்களை கடத்தி வன்புணர்ந்து கொலைசெய்த மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இவர்கள் இரண்டு பேரிடமும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கோவை மோகன் கதி தங்களுக்கு வேண்டாம் என்று காவலர்களிடம் இருவரும் கதறி அழுதனர். இதனையடுத்து காவல்துறையினர் உறுதியளித்ததால் அழுவதை விட்டுவிட்டு முழு விசாரணைக்கு ஒத்துழைத்தனர்.

கடத்தலில் கிடைத்த ஒரு கோடி ரூபாய் பணத்துடன் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். விஜய், பிரபு இருவரையும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் இருவரையும் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தரத்தில் தாழ்ந்துவரும் தமிழ்ப்படங்கள் : இயக்குநர் மிஷ்கின்

தமிழ்ப்படங்கள் தரத்தில் தாழ்வுற்றிருப்பதாக இயக்குநர் மிஷ்கின் வருத்தப்பட்டார்.

செவன்த் சேனல் நிறுவனம் தொடர்ந்து 7-வது ஆண்டாக நடத்தும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஜெர்மன், பெல்ஜியம், போலந்து உள்ளிட்ட நாடுகளின் சிறந்த படங்கள் இதில் திரையிடப்படுகின்றன.


இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின்,

"தமிழில் தரம்தாழ்ந்த படங்களாகவே வரிசையாக இப்போது வந்துகொண்டிருக்கின்றன. இந்தத்தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது தமிழ் திரைப்படத்தின் தரம் கீழ் நோக்கி போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. . நான் இயக்கிய "அஞ்சாதே', "சித்திரம் பேசுதடி' ஆகிய படங்கள் தரம் தாழ்ந்த படங்கள்தான். என்ன செய்வது, வியாபாரத்துக்காகவும், ரசிகர்களைக் கவருவதற்காகவும் நல்ல சினிமாக்களில் சில விஷயங்களைத் திணிக்க வேண்டியிருக்கிறது.

சில விஷயங்களுக்காக இரண்டு படங்களிலும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்ட குத்துப்பாட்டைத் திணிக்கப் போய் என்னை 'குத்துப் பாட்டு ஸ்பெஷலிஸ்ட்' என்று சொல்லிவிட்டார்கள்" என்ற மிஷ்கின் "நல்ல படம் எது என்பதற்கு நான் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது" என்றும் கூறினார்.

விழாவில் பத்தி எழுத்தாளர் சாருநிவேதிதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர்.

சிங்கப்பூரில் வண்ணமிகு தீபாவளி


சிங்கப்பூரில் தீபாவளி வந்து விட்டதற்கு முக்கிய அடையாளம் லிட்டில் இந்தியாவில் ஒளி வெள்ளம், கேம்பல் லேன் தீபாவளி கிராமம், சிராங்கூன் பிளாசா எதிரே தீபாவளி வர்த்தகச் சந்தை.

இவை மூன்றும் இம்மாதம் 7ம் தேதி வியாழக்கிழமையன்று செயல்படத் தொடங்கிவிட்டது.

கேம்பல் லேன் தீபாவளி கிராமும், சிராங்கூன் பிளாசா எதிரே தீபாவளி வர்த்தகச் சந்தையும் வியாழக்கிழமை காலை யிலேயே செயல்படத் தொடங்கி விட்டன.

தீபாவளிக்கு முதல் நாள் நவம்பர் 4ம் தேதி இரவு வரை இந்தச் சந்தைகள் செயல்படும்.

கேம்பல் லேன் விழாக் கிராமத்தில் விற்பனைச் சந்தையுடன் இந்தியாவிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்டுள்ள இந்தியப் பாரம்பரிய கைவினைக் கலை கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிராங்கூன் பிளாசா எதிரே அமைக்கப்பட்டுள்ள வர்த்தகச் சந்தையில் பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.

தீபாவளி ஒளியூட்டு பெரிய விழாவாக வியாழன் இரவு இடம் பெற்றது.

இவ்வாண்டு ஒளியூட்டு, செல்வச் செழிப்பை மையமாகக் கொண்டுள்ளது.

இதில் விளக்குத் தோரணங்களின் வடிவமையமாக இவ் வாண்டு விளக்குகளே இடம் பெற்றுள்ளன.

பொருளியல் மந்தத்தில் இருந்து வெற்றிகரமாய் சிங்கப்பூர் மீண்டதைக் கொண்டாடும் விதத்திலும், இன¬ வரும் நாட் களிலும் வளமை கொழிக்க வாழ்த்தும் விதத்திலும் செல்வச் செழிப்பை மையமாய்க் கொண்டதால், முகப்பில் யானைகள் குளிர்விக்கும் { மகாலட்சுமி அருள் வழங்கியபடி வீற்றிருக் கிறாள்.

இந்த ஒளியூட்டின் ஏற்பாட் டாளர்களான இந்து அறக் கட்டளை வாரியத்தினரும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தி னரும் இவ்வாண்டு ஒளியூட்டில் வளமையுடன் பசுமையையும் முக்கியமாய்க் கருத்தில் கொண்டு உள்ளனர்.

இதற்காகச் சுற்றுப்புறச் சூழ லுக்குகந்த வகையில் மின்சக்திச் சேமிப்பு விளக்குகளை ஒளியூட்டுக்குப் பயன்படுத்தி உள்ளனர்.

அதிக மின்சக்தி இழுக்கும் மஞ்சள் விளக்குகளுக்கு பதில் வெள்ளை விளக்குகள் பயன்படுத்தியுள்ளதில் துவங்கி, ஏற் கனவே இருக்கும் தெரு விளக்குக் கம்பங்களையே பயன்படுத்தியுள்ளது வரை மின்சக்திச் சிக்கன நடவடிக்கைகள் பளிச்சிடுகின்றன.

மேலும் அக்டோபர் 30ம் தேதி ‘தீபாவளி உற்சவ்’ எனப் படும் சாலை ஊர்வலம் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 7.00 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த ஊர்வலம் நடைபெறும்.

இந்நிகழ்ச்சில் பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

நிதி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் ‘தீபாவளி உற்சவ்’ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்கிறார்.

நவம்பர் 4ம் தேதி வசந்தம் - எம்1 தீபாவளி ‘கவுன்டவுன்’ சிறப்பு நிகழ்ச்சி. ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெறும் உள் ளூர் -மலேசிய கலைஞர்களின் ஆடல், பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அதிபர் எஸ். ஆர். நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்று மகிழலாம்.

"இந்துக்களுக்குத் தீபாவளி ஒரு முக்கியமான உன்னதமான பண்டிகை. இந்த மகிழ்ச்சிமிகு பண்டிகை மூலம் இந்திய மக்க ளின் வலுவான பாரம்பரிய மற்றும் வரலாற்றுப் பண்புகளைப் பறைசாற்ற நாங்கள் எண்ணி உள்ளோம்.

"அதற்காக பற்பல நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்து உள் ளோம்," என்றார் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு எஸ் நல்லதம்பி.

‌விமான‌ங்க‌ள் மோத‌ல்

மு‌ம்பை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இர‌ண்டு ‌விமான‌ங்க‌ள் ஒ‌ன்றோடு ஒ‌ன்று மோ‌தி‌க் கொ‌ண்ட ‌நிக‌ழ்‌வு பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தியு‌ள்ளது.
கி‌ங்‌பிஷ‌ர் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு சொ‌ந்தமான ‌விமான‌ம் ஒ‌ன்று ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் சர‌க்குகளை இற‌க்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்தது.

மு‌ம்பை‌யி‌ல் இரு‌ந்து ம‌ஸ்க‌ட் செ‌ல்லு‌ம் ஜெ‌ட் ஏ‌ர்வ‌ே‌‌‌ஷ் ‌விமான‌ம் ஒ‌ன்று ‌கி‌ங்‌கிஷ‌ர் ‌விமான‌ம் ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்த தட‌த்த‌ி‌ல் இரு‌ந்து புற‌ப்பட தயாரா‌கி கொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ப்போது ‌ர‌ன்வே‌யி‌ல் பி‌ன்‌புறமாக வ‌ந்த ஜெ‌‌ட் ஏ‌ர்வே‌ஷ் ‌விமான‌த்‌தி‌ன் இற‌க்கைக‌ள் ‌நி‌ன்று கொ‌ண்டி‌ரு‌ந்த சர‌க்கு ‌விமான‌த்‌தி‌ன் ‌பி‌ன்புற‌ம் உர‌சி உ‌ள்ளது.

இதனா‌ல் இர‌ண்டு ‌விமான‌ங்களு‌ம் பய‌ங்கர ச‌த்த‌த்துட‌ன் அ‌தி‌ர்‌ந்து‌ள்ளது. ஜெ‌‌ட் ஏ‌ர்வே‌ஷ் ‌‌விமான‌ம் ‌கி‌ங்‌பிஷ‌ர் ‌விமான‌த்துட‌ன் உர‌சிய ‌சி‌றிது நேர‌த்‌தி‌லேயே ‌நிறு‌த்த‌ப்‌ப‌ட்டதா‌ல் பெ‌ரிய அள‌வி‌ல் ‌நிகழ இரு‌ந்த அச‌ம்பா‌வித‌ம் த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் ஜெ‌ட் ஏ‌ர்வே‌ஷ் ‌விமான‌த்‌தி‌‌‌‌ன் இற‌க்கைக‌ள் இலேசாக சேத‌ம் அடை‌ந்து‌ள்ளது. ‌ஜெ‌ர் ஏ‌ர்வே‌ஷ் விமான‌த்‌தி‌ற்கு‌ள் சுமா‌ர் 100 பய‌ணிக‌ள் உ‌ள்பட ‌சி‌ப்ப‌ந்‌திக‌ள் பாதுகா‌ப்பாக ‌‌கீழே இற‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

‌‌விமான‌ங்க‌ள் ஒ‌ன்றோடு ஒ‌ன்று உர‌சி கொ‌ண்ட ‌நிக‌ழ்வு கு‌றி‌த்து ‌மு‌ம்பை ‌விமான ‌நிலைய பொறு‌ப்பு ஆணைய‌ம் ‌உய‌ர் ம‌ட்ட ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது!

450 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்று சின்னமும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளமுமான பாபரி மஸ்ஜித் தேசத் துரோக சங்பரிவார்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதை நாம் அறிவோம்.

இது இந்திய தேசத்திற்கே மிகப் பெரிய அவமானமாகவும், தலைக் குனிவாகவும் உலக அரங்கில் இருந்து வருகின்றது.

பாபரி பள்ளிவாசல் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் சரியாகவும், முறையாகவும், நீதியாகவும் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தபோது நெஞ்சில் இடியாக வந்தது அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

பள்ளிவாசல் இடத்தை மூன்று பங்காக வைத்து எந்தவிதமான சட்ட அடிப்படையோ, ஆவண அடிப்படையோ இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் கிராம பஞ்சாயத்துத் தீர்ப்புப் போல் வழங்கியது இந்திய முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது. கண் முன்னால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது கண்டும் நீதி கிடைக்கவில்லையே என்ற வேதனை, கொந்தளிப்பு இந்திய முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.

இந்த அநீதியை ஜனநாயக ரீதியாக கண்டிக்கும் வண்ணமாக அலஹாபாத் உயர்நீதிமன்றத்திற்கு செல்லக் கூடிய சூழல் தற்போது இல்லாததால், சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் என குடும்பத்துடன் பெருந்திரளாக சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி...


நீதி வேண்டும்! நீதி வேண்டும்! பாபரி பள்ளிவாசல் வழக்கில் நீதி வேண்டும்!

காந்தி வாழ்ந்த தேசமடா! அம்பேத்கர் தந்த சட்டமடா!

மாறிப் போச்சு மாறிப் போச்சு! கட்டப் பஞ்சாயத்தாய் மாறிப் போச்சு!

உடையவனுக்கு ஒரு பங்கு! உடைத்தவனுக்கு 2 பங்கா!

இது நீதியா!! அநீதியா??

ஆபத்து! இது ஆபத்து! நீதித்துறைக்கே ஆபத்து!!

இந்து முஸ்லிம் ஒற்றுமையுடன் பாபரி பள்ளியை கட்டுவோம்!

இந்தியாவை வல்லரசாக உருவாக்குவோம்!

என்று விண் முட்டும் கோஷங்களுடன் உறக்க உணர்ச்சிகரமாக குரல் எழுப்பியபடி முற்றுகையிட முனைந்தபோது, காவல் துறையினரால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த அறப் போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் S.M.பாக்கர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், யாதவ மகாசபைத் தலைவர் டாக்டர். தேவநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொருளாளர் யூஸுஃப், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொருளாளர் முஹம்மத் இஸ்மாயில், முஸ்லிம் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா, தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமது, இந்திய தேசிய லீக் அமைப்பாளர் தடா அப்துர் ரஹீம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், துணை பொதுச் செயலாளர் முஹம்மது இக்பால், பொருளாளர் அபூபக்கர், மாநிலச் செயலாளர்களான அப்துல் ஹமீது, அபு ஃபைஸல், இனாயத்துல்லா, முஹம்மது ஷிப்லி, செங்கிஸ்கான், வேளாச்சேரி சிராஜ், அபூ ஆசியா மற்றும் கோவை ஜஃபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மாவட்ட நிர்வாகிகள் யூனுஸ், காஜா கரீமுல்லாஹ், யூஸுஃப்கான், ஹனிஃபா, தாம்பரம் ரஹ்மத்துல்லாஹ், ஹனீஃப், ஹஸன் அலி, ஆவடி ஃபாரூக், ஷான் பாஷா ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து இதஜ நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். சகோதரிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மண்டபங்களில் சிறை வைக்கப்பட்ட பெண்களுக்கு மாநில பேச்சாளர் மசூதா ஆலிமா உரை நிகழ்த்தினார்.

சீனாவில் இரண்டு கால்களுடன் நடந்து வரும் பன்றி!

இரண்டு கால்களுடன் மட்டுமே நடந்துவரும் பன்றி ஒன்று சீனாவில் தற்போது பிரபலமடைந்து வருகின்றது.

10 மாதமேயான இப்பன்றி சூங் ஜியாங் குயாங் என அக் கிராமத்திலுள்ளவர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்றது.


பிறந்ததிலிருந்து இப்பன்றி 2 கால்களால் மட்டுமே வாழ்ந்து வருகின்றது.


இவ்வருடம் பிறந்த ஒன்பது பன்றிக்குட்டிகளில் இக்குட்டி மட்டுமே இவ்வாறு பிறந்ததாக அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.


இதன் நிலையைக் கண்ட தனது மனைவி இதனை எறிந்து விடும்படி கூறியதாகவும் தான் அந்த யோசனையை மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.


தற்போது இதன் நிறை 50 கிலோகிராம்கள் ஆகும். இதன் உரிமையாளரே இதற்கு நடைப்பயிற்சி வழங்கியுள்ளார்.


இதனை விலைக்கொடுத்து வாங்க பலர் முன்வந்ததாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

தமிழக சட்ட மேலவை தேர்தல்....

தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளும் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்) தங்களது சார்பாக சில உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிமை பெற்றுள்ளனர்.
அப்ஸலுல் உலமா பட்டம் பெற்ற ஆலிம்களும், M.A. (அரபிக்) பட்டம் பெற்ற பட்டதாரி ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவர்.
இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்.

em1.jpg

em2.jpg

நீங்கள் அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.

தவறான தீர்ப்புக்கு ஜனநாயக போராட்டம்...

பாபர் மஸ்ஜித் பற்றிய அலஹபாத் தீர்ப்பு குறித்த ஐ.என் டி .ஜே. நிலைப்பாடு தான் சரியானது என்ற நிலைக்கு சமுதாயத்தில் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது !

தொடர்ந்து சமுதாய இயக்கங்களின் , சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் கூட உயர் நீதி மன்ற முற்றுகை பற்றிய அறிவிப்பும், திருமாவளவன்,தேவநாதன் ,கிருஷ்ணசாமி ,மார்க்ஸ் உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்பதில் இருந்தும், பல் முனையில் இருந்தும் வரும் ஆதரவில் இருந்தும் 'பூனைக்கு மணி கட்டும்' போராட்ட அறிவிப்பின் மூலம் கட்டாய திருமண சட்டத்தை எதிர்த்து முதல் போராட்டத்தையும், குரான் எரிப்பை கண்டித்த போராட்டத்திலும் களம் கண்ட முதல் இயக்கம் எனும் பெருமையுடன் ,நன்மையில் முந்திக்கொண்ட நற்க்கூலியையும் இறைவனிடம் இருந்து இ.த.ஜ. பெற்று கொள்ளும்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் டி.என்.டி.ஜே. வின் செயற்குழுவும் அலஹபாத் தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி ௪-ல் போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.முதலில் எதிர்த்து, பின் உச்ச நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க போவதாக மன்னடி கூட்டத்தில் மடத்தனமாக கூறினாலும் தற்போதய மனமாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது!

அடுத்து த.மு.மு.க.,பாப்புலர் பிரான்ட் போன்ற இயக்கங்களும் தயக்கத்தை கைவிட்டு போராட்டங்களை அறிவிக்க வேண்டும் ! தமிழகத்தில் இ.த.ஜ. ஏற்றி வைத்த போராட்ட நெருப்பு இந்தியாவெங்கும் பற்றிப்பரவ வேண்டும். என இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் கேட்டுகொன்ன்டுள்ளார் .

போராட்டம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான தீர்ப்பு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் சென்னையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. சுமார் 450 ஆண்டுகள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த மசூதியில் தொழுகையே நடைபெறவில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மசூதியில் 1949, டிசம்பர் 23-வரை தொழுகை நடந்துள்ளது.


அதன்பிறகு, கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம்கள் அங்கு தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், அங்கு தொழுகையே நடைபெறவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது.


இந்துக்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே! உணர்வின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. நாங்கள் உரிமையின் அடிப்படையில் போராடுகிறோம். முஸ்லிம்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். கொள்கையின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவி உள்ளோம். நாட்டில் வாழும் இந்து சகோதரர்கள் முஸ்லிம்களின் தொப்புள்கொடி உறவுகள்தான் என்பதில் ஐயமில்லை. அதற்காக, உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.


நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்துத்தான் 60 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் ராமர் பிறந்த இடம், பள்ளிவாசலுக்கான கூறுகள் போன்ற வழக்கிற்கு தொடர்பில்லாதவை குறித்தெல்லாம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன.


காங்கிரஸ் காரணம்: அயோத்தி பிரச்னையில் பாபர் மசூதிக்கு பூட்டு, பூட்டை உடைத்து பூஜை, மசூதியை தரைமட்டமாக்கியது போன்ற நிகழ்வுகளின்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்துள்ளது. முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துள்ளதை வரலாறு நிரூபிக்கிறது. அணு உலை விபத்துகான இழப்பீடு மசோதா, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் போன்ற விஷயங்களில் பாரதிய ஜனதா கட்சியினரை திருப்திபடுத்தும் நோக்கில் காங்கிரஸ் செயல்படுகிறதோ என ஐயம் எழுந்துள்ளது.


போராட்டம்: அயோத்தி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகளை ஒன்று திரட்டி மத்திய, மாநில அரசுகளுக்குப் எதிராகப் போராட்டம் நடத்த உள்ளோம். இதுகுறித்து ஆலோசனை நடத்த எங்கள் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) சேலத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது என்றார் பாக்கர். பேட்டியின்போது அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் செய்யது இக்பால், மாநிலச் செயலாளர் அபுபைசல், ஆகியோர் உடன் இருந்தனர்

நன்றி: தினமணி

ரமணா பட பாணியில் இறந்து 2 நாட்களான பிணத்துக்கு சிகிச்சை; ரூ.1 1/2 லட்சம் கேட்டதால் ஆஸ்பத்திரி மீது கல்வீச்சு

திருச்சி, மாவட்டம் லால்குடி அருகே கூகூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 24). வேன் டிரைவர். இவர்கள் மோட்டார் சைக்கிள் மோதி காயம் அடைந்தனர். பிரபாகரனை உறவினர்கள் திருச்சி உறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 24-ந் தேதி முதல் பிரபாகரன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 1 மணிக்கு பிரபாகரன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் 3 நாட்கள் சிகிச்சை அளித்த வகையில் கட்டணம் ரூ. 1 1/2 லட்சம் கொடுக்குமாறு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது.


பணம் கொடுத்தால் தான் பிணத்தை எடுத்துச் செல்ல முடியும் என்று கூறினர்.

இந்த நிலையில் இன்று காலை பிரபாகரனின் உறவினர்கள் 50 பேர் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும். பிரபாகரன் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

24-ந்தேதி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரபாகரனை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவே இல்லை என்றும் மறுநாளே (25-ந் தேதி) பிரபாகரன் இறந்து விட்ட நிலையில் ரமணா படபாணியில் பணத்துக்காக பிணத்துக்கு சிகிச்சை அளித்து உள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

அப்போது திடீர் என ஆஸ்பத்திரி மீது கல் வீசப்பட்டது. இதில் ஆஸ்பத்திரி கண்ணாடி உடைந்தது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்தது.

ஆஸ்பத்திரி மீது கல் வீசி ரகளை செய்ததாக பிரபாகரனின் உறவினர்கள் 25 பேரை போலீசார் வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பிரபாகரனின் பிணம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

தீபாவளிக்கு அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு துவக்கம்

தீபாவளிக்கு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு பஸ்களில், 30 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கான முன்பதிவு, அக்., 3ம் தேதி முதல் துவங்கவுள்ளது.ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வோர் அனைவரும், அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நம்பியுள்ளனர்.

ஆம்னி பஸ்களில் இஷ்டம் போல் டிக்கெட் கட்டணம் வசூலிப்பதால், நடுத்தர மக்கள் அனைவரும் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். அரசு விரைவு பஸ்களில் 30 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து கொள்ளும் வசதியுள்ளது. அதன் அடிப்படையில் தீபாவளிக்கு பண்டிகைக்கு முன்கூட்டியே வெளியூர் செல்பவர்கள், பயணம் செய்யப்போகும் நாளில் இருந்து 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், அக்., 3ம் தேதி முதல் தீபாவளி முன்பதிவு துவங்குவதாக, முன்பதிவு மையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றியூர், தி.நகர், தாம்பரம், பிராட்வே உள்ளிட்ட பஸ் நிலையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் 456 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 80க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளனர். மேலும், விழுப்புரம், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த மாதங்களில் அடுத்தடுத்து கிடைத்த அரசு விடுமுறை நாட்களில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.ஆகையால், மற்ற கோட்டங்களில் இருந்து அதிகளவிலான கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, நவம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க, முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம்.

ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அரசுக்கு கூடுதல் செலவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கான சிறப்புப் படியும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைக்காமலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு, "லக்' அடித்துள்ளது.


தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வந்துள்ள தமிழக அரசு, புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்தியதோடு, அந்த சம்பளத்தில் இருந்த முரண்பாடுகளையும் நீக்கி சமீபத்தில் உத்தரவிட்டது. இதே போல, இந்த ஆண்டு துவக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதும், எந்த சங்கமும் கோரிக்கை வைக்காமலேயே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த, சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக, தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் ஏதும் அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. எனினும், முதல்வர் கருணாநிதியாக முன்வந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படியை கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து உயர்த்தி அறிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க, முதல்வர் கருணாநிதி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது அடிப்படை சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 35 சதவீதம் அகவிலைப்படியாக பெற்று வந்த ஊழியர்கள், இனி 45 சதவீதம் அகவிலைப்படியாக பெறுவர். இதனால், ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்துக்கு ஏற்ப, 700 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை கூடுதலாகக் கிடைக்கும். உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி, ஜூலை 1ம் தேதியில் இருந்து நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நிலுவைத் தொகை, செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்ட பின்னரே வழங்கப்படும். இந்த உயர்வு, பகுதி நேர ஊழியர்களுக்கு பொருந்தாது. "அகவிலைப்படி உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு 2,190 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்' என, அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மதிப்பூதியம், நிலையான ஊதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை பெறுவோருக்கும் ஜூலை 1ம் தேதியில் இருந்து சிறப்புப் படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் 600 ரூபாய்க்குள் சம்பளம் பெறுவோருக்கு மாதம் 20 ரூபாயும், 600 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு 40 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும். இந்த சிறப்பு படி, உள்ளாட்சி பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குவோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் பொருந்தும். முதல்வர் அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வை பாராட்டி, அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன. தாங்கள் கேட்காமலேயே அறிவிப்பு செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன.

கலைஞர் இன்று தஞ்சை பயணம்

தஞ்சை பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


முதலமைச்சர் கருணாநிதி பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று மதியம் 1.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார்.


விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலமாக தஞ்சாவூர் போகிறார். இன்று மாலை நடைபெறும் விழாவிலும், நாளை மாலையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் நிறைவுவிழா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பேசுகிறார்.


விழாவின் 4-வது நாளான இன்று காலை 10.30 மணிக்கு பெரியகோவில் வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். கவிஞர் கனிமொழி எம்.பி. வரவேற்றுப்பேசுகிறார்.

மாலை 5.45 மணிக்கு திருமுறை இன்னிசை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது. 7.30 மணிக்கு இசை மற்றும் நடனக்கலைஞர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பிரபல நடன கலைஞர் பத்மாசுப்பிரமணியம் குழுவினரின் 1000 நடனக்கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் புகழேந்தி, கலைவாணன் குழுவினரின் ராஜராஜசோழன் வரலாற்று நாடகம் நடைபெறுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு விழா நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு நிறைவு விழா பேருரை ஆற்றுகிறார்.

மத்திய மந்திரி ஆ.ராசா, பெரியகோவில் மற்றும் ராஜராஜசோழன் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொள்கிறார். மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆயிரம் ஆண்டு நினைவு 10 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொள்கிறார்.

முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்கும் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் பெரியகோவில் வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் 21 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரின் எங்கு பார்த்தாலும் மின் விளக்கு அலங்காரமாக காட்சி அளிக்கிறது. பெரியகோவில் மற்றும் தஞ்சையில் உள்ள கோபுரங்கள், அரண்மனை, மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், கோவில்கள், அரசு அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

அமைதி காக்க வேண்டுகோள்

அயோத்தி நிலம் தொடர்பாக வரும் 24-ம் தேதி வெளியாக உள்ள தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.எம்.சையத் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் அரசு இந்த கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு 24-ம் தேதி வெளியாக உள்ளது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளி வாசல்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வரும் அக். 3-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார். கட்சியின் மாநில துணைத் தலைவர் முஹம்மது முனீர், மாவட்டத் தலைவர் முஹம்மது ஹூஸைன், துணைத் தலைவர் இமாம்தீன், செயலர் பக்கீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

sourse: intjonlin.in

பன்றிக்காய்ச்சளுக்கு பலி !


செ‌ன்னை‌யி‌ல் ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு க‌‌ல்லூ‌ரி ஆ‌சி‌ரிய‌ர் ஒருவ‌ர் ப‌‌லியா‌‌கியு‌ள்ளா‌ர். இதனா‌‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் 11 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை தேனா‌‌ம்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள எ‌ஸ்.ஐ.ஈ.டி. கலை ம‌ற்று‌ம் அ‌றி‌வி‌யிய‌ல் ‌க‌ல்லூ‌ரி‌‌யி‌ல் ப‌‌ணியா‌ற்‌றி வ‌ந்தவ‌ர் ஆ‌‌சி‌ரிய‌ர் பவு‌‌சியா பானு.

இவ‌ர் ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு செ‌ன்னை அ‌ண்ணாநக‌‌ரி‌ல் உ‌ள்ள ஒரு த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு ‌சி‌கி‌ச்சை பெ‌ற்ற வ‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி ஆ‌சி‌ரிய‌ர் பவு‌சியா பானு இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

ஆ‌சி‌ரிய‌ர் மறைவு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து க‌ல்லூ‌ரி‌க்கு ஒருநா‌ள் ‌விடுமுறை அ‌ளி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

lமாபெரும் இலவச ஹோமியோ மருத்துவ முகாம் !

கடந்த (19.09.2010)காலை 10 மணிக்கு அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா சங்கத்தில் நடைப்பெற்றது இதை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் PS ஹமீத் தலைமை வகித்தார் .இந்த முகாமை பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் NR ரங்கராஜன் துவக்கி வைத்தார் . இந்த முகாமில் உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வியாதிகளுக்கும் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்ட வியாதியஸ்தர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன .இந்த முகாமில் 300 க்கும் மேற்ப்பட்ட பயானாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் மன்ற தலைவர் MMS அப்துல் வகாப் ,நகர முஸ்லிம் லீக் தலைவர் KK .ஹாஜா நஜ்முதீன் ,நகர முன்னாள் செயலாளர் Dr ஹாஜி MA முகமத்ஸாலிஹ். பொருளாளர் அப்துல் ரஹ்மான், நகர செயலாளர் வக்கீல் A முனாப் BABL , நகர இ அணி தலைவர் . MA ஷாகுல் ஹமீத், நகர மாணவர் அணி அமைப்பாளர் இதிரிஸ் அஹமது , மாவட்ட பிரதிநிதி MR ஜமால் முகம்மத் .உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பாக வழிநடத்தினர் .

முகாமில் பணியாற்றிய ஸ்ரீ ஜெயேந்திராள் ஜனகல்யான் ஹோமியோ மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .

இம்முகாமில் சகோதரர் மகிழங்கோட்டை மாரிமுத்து அவர்கள் தானாக முன்வந்து இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கி தனது சமய நல்லிணக்கத்தை வெளிக்காட்டினார் .

இந்த முகாமை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் .

படம் :ஜேப்பி

துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கிய பிச்சைக்காரர்

துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் பிச்சைக்காரர் ஒருவர் தங்கியிருந்தார். வளைகுடா நாடுகளில் பிச்சை எடுக்கும் தொழில் மிகவும் பரபரப்பாக நடை பெற்று வருகிறது. சுற்றுலா விசாவில் வரும் உடல் ஊன முற்றவர்கள் மற்றும் சிலர் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். ஏனெனில் வசதி படைத்த இந்த நாடுகளில் பிச்சைக்காரர்களுக்கு தாரளமாக பணம் கிடைக்கிறது.

எனவே, இங்கு அதிக அளவில் குவிகின்றனர். இந்த நிலையில் ரமலான் பண்டிகையையொட்டி துபாய் நாட்டில் ரோட்டில் சுற்றித்திரிந்த 360 பிச்சைக்காரர்களை அந்நாட்டு சுற்றுலா துறை கைது செய்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரு நபர் துபாயில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது. இது விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

பிச்சை எடுப்பதன் மூலம் தனக்கு அதிக அளவில் பணம் கிடைப்பதால் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதாக அவர் கூறினார். இந்த தகவலை துபாய் சுற்றுலா பாதுகாப்பு துறை இயக்குனர் மேஜர் முகமது ரஷீத் அல் முனகரி தெரிவித்தார்.

பிச்சை எடுப்பதற்காக தற்போது 5-வது தடவையாக அங்கு சுற்றுலா விசாவில் வந்திருப்பதாக உடல் உறுப்பை இழந்த பிச்சைக்காரர் ஒருவர் கூறினார். ஆனால், அவர்களின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

ரமலான் பண்டிகையின் போது மசூதிக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்த போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்.

பெரியகோவில் 1000-வது ஆண்டு விழா

தஞ்சை பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழாவையொட்டி தஞ்சையில் வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. விழாவையொட்டி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை பெரியகோவில் மாதிரி வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி அரங்கம், பெரியகோவிலில் கருத்தரங்கம், தஞ்சையில் 5 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்கள்.


இந்த நிலையில் பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழா ஏற்பாடுகளை கவிஞர் கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை செயலாளர் அசோக்வரதன் ஷெட்டி, பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம், சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு, ,பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர்கள் கருணாகரன், மூர்த்தி, கலெக்டர் சண்முகம், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வி சிவஞானம், மற்றும அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.


விழா பற்றி கனிமொழி எம்.பி. கூறியதாவது:-


தஞ்சை பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம். வருகிற 24-ந்தேதி தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி தொடங்குகிறது. மேலும் தஞ்சையில் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-


பெரியகோவில் 1000-வது ஆண்டு விழா கண்காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி ¢உள்ளார். சோழர்களின் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெறும். மேலும் சோழர்களின் ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலையை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையும்.


ராஜராஜனின் சிலை குஜராத்தில் உள்ள மியூசியத்தில் உள்ளது. இந்த சிலையை மீட்க சுற்றுலா துறை செயலாளர், தொல்லியல்துறை செயலாளர், குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் குஜராத் சென்று பேச்சு நடத்தினார்கள். அவர்கள் இது பற்றி ஆ¢ய்வு செய்து தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.

ஜமாத் தலைவர் உள்பட 2 பேர் சுட்டு கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (வயது55).
பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குத்புதீனுக்கும், இதயதுல்லாவுக்கும், தொழுகை நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இது சம்பந்தமாக விசாரிக்க குத்புதீன் உறவினர் திருவிடைமருதூர் அருகேயுள்ள திருமங்கலகுடியை சேர்ந்த ஹாஜ்முகமது(40). தனது ஆதரவாளர்கள் சுமார் 15 பேருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திருவிடைச்சேரிக்கு வந்தார். அப்போது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயிலுக்கும் ஹாஜ் முகமதுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதில் ஆத்திரமடைந்த ஹாஜ் முகமது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயில், மற்றும் அருகே நின்ற அஜீத் முகமது ஆகிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் திருவிடைச்சேரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹாஜ் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே திருமங்கலகுடியில், உள்ள ஹாஜ் முகமது வீட்டில் போலீசார் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கொலையாளி ஹாஜ் முகமது, நேற்று, சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் ஈசுவரமூர்ததி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக் கப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் பெயர் வருமாறு:-
1. முகமது குத்புதீன், 2. அப்துல் மாலிக், 3. சேத்தப்பா, 4. சலாவுதீன், 5. முகமது இலியாஸ், 6. பசீர் மைதீன், 7. அப்துல் ரகீம், 8. ஜமீல், 9. முஜிபுர் ரகுமான், 10.முகமது அன்சாரி. 11. ஹபீப் ரகுமான், 12. அன்வர்தீன், 13. பசீர் முகமது, 14. ரவி, 15.ஜியாவுதீன்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஏதேனும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க இன்றும் போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.
திருவிடைச்சேரி பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கலெக்டர் சந்திரசேகரன் விசாரித்த காட்சி. அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உள்ளார்.

வாகனங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம்

மோட்டார் வாகனங்கள் உற்பத்தியில், சர்வதேச அளவில் இந்தியா ஏழாவது மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனரக வாகனங்கள் துறை அமைச்சகத்தின் செயலாளர் பீ.எஸ்.மீனா கூறுகையில்,

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சியால், கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகனங்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு இதுவே முக்கிய காரணமாகும்.

கடந்த 2005-06ஆம் நிதி ஆண்டில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி 97.44 லட்சம் எண்ணிக்கைகளாக இருந்தது. இது, சென்ற 2009-10ஆம் நிதி ஆண்டில் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து, 1.41 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது, 25 சதவீதம் (1.12 கோடி வாகனங்கள்) அதிகமாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 32.4 சதவீதம் அதிகரித்துள்ளது.


அடுத்த 10 ஆண்டுகளில் வாகனங்கள் விற்பனை நான்கு மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஆண்டிற்கு பயணிகள் வாகனங்கள் விற்பனை 90 லட்சம் எண்ணிக்கையாகவும், இருசக்கர வாகனங்கள் விற்பனை 3 கோடியாகவும் உயரும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து வரும் 2020ஆம் ஆண்டுக்குள் வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஐந்து நாடுகளுள் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என மீனா மேலும் தெரிவித்தார்.

ஏ.டி.எம். மையங்கள் எண்ணிக்கை உயர்வு

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், ஏ.டி.எம். என்று அழைக்கப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா மையங்களின் எண்ணிக்கை 53,906 ஆக இருந்தது. இது, சென்ற ஆகஸ்டு மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்து 61,702 ஆக உயர்ந்துள்ளது.


ஒரு வங்கியின் வாடிக்கையாளர், இதர வங்கிகளின் சூஏ.டி.எம்' மையங்களையும் பயன்படுத்தும் வகையில் விதிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி தளர்த்தியது.

இதனையடுத்து, இதர ஏ.டி.எம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சென்ற ஆகஸ்டு மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 10.18 கோடியாக உயர்ந்துள்ளது.


இது, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் 5.68 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியால், பல வங்கிகள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதிதாக கிளைகளை தொடங்குவதுடன், ஏ.டி.எம். மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகின்றன.

நன்றி : நக்கீரன்


நீடாமங்கலத்தில் நின்று, சென்ற நாகூர் - கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்

நாகூரில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் நேற்று முதல் நீடாமங்லத்தில் நின்று சென்னை செல்லும் பயணிகளை ஏற்றி சென்றது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பங்கேற்று பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.நாகூரில் இருந்து சென்னைக்கு தினமும் கம்பன் எக்ஸ்பிரஸ் சென்று வருகிறது. நீடாமங்கலம், மன்னார்குடி போன்ற பெரிய நகராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னை செல்ல தஞ்சை சென்று பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.


நேற்று முதல் அந்த நிலை மாறி ரயில்வே முன்பதிவும், சென்னை செல்ல நீடாமங்கலத்திலேயே பயணம் செய்யும் வசதியும் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் தளிக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்றும், தளிக்கோட்டையில் இருந்து மன்னார்குடி வழியாக நீடாமங்கலம் வரை செல்லும் அரசு பஸ் ஒன்றையும் முன்னார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார்.நேற்று காலையில் அந்த பஸ்ஸில் அவர் நீடாமங்கலத்தில் இருந்து தளிக்கோட்டைக்கு பயணம் செய்தார்.

முத்துப்பேட்டையில் செப். 18-ல் விநாயகர் ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் செப். 18-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறவுள்ளதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.


விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தனித்தனியே நடத்தப்பட்டது. இக்கூட்டங்களுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு குறித்து நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ஊர்வலம் செல்லும் பாதை, எழுப்பப்படும் கோஷங்கள் குறித்து இருதரப்பிடமும் சுமூகமான கருத்துகள் கேட்கப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பிற்பகல் 4 மணிக்குள் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, மாலை 6 மணிக்குள் பாமணி ஆற்றில் கரைக்க விழா ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஊர்வலம் நடைபெறும் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டவுள்ளது. விழா நடைபெறும் போது நடமாடும் மருத்துவக் குழுக்கள் உடன் செல்லவும், அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. மூர்த்தி பேசியது:


கடந்த காலங்களில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலங்களின் போது நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 600 காவலர்கள் நிகழாண்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம். தங்கவேல், மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சரவணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் துரைராஜ், வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், இந்து அமைப்புகள் சார்பில் முருகானந்தம், கண்ணன், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் எஸ்.எஸ். பாக்கர் அலி சாஹிப், அகமது பாசித், முகமது இப்ராஹீம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு விருது

பொது மக்களின் குறைகளை சிறப்பான வகையில் தீர்வு காண்பதை பாராட்டி, சென்னை மாநகராட்சிக்கு "ஸ்காட்ச்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது,'' என, சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பொதுமக்களின் குறைகள் இணையதளம் மூலம் பதிவு செய்து தீர்வு காண 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்க 97899-51111 என்ற எண்ணும் உள்ளது.மேலும், www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணையதளத்தை பயன்படுத்தியும் பொதுமக்களின் குறைகள் உடனே தீர்க்கப்படுகிறது.குப்பைகள் அகற்றுதல், தெரு நாய்கள் பிடித்தல், கட்டட இடிபாடுகளை அகற்றுதல், சொத்து வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், அமரர் ஊர்திகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பெறுதல், தெருவிளக்கு எரியாதது தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவை சரி செய்யப்படுகின்றன.இந்த சிறப்பான பணிக்காக, அரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் (ண்டுணிஞிட) நிறுவனம், சென்னை மாநகராட்சிக்கு 2010ம் ஆண்டிற்கான "ஸ்காட்ச்' விருதை வழங்க தேர்வு செய்துள்ளது. வரும் 22ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

20,000 தமிழ் இளைஞர்களை காணவில்லை!

இலங்கையில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாக, அந்நாட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் நடைபெற்ற விடுதலைபுலிகளுடனான இறுதிப் போரின்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் செய்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழ் அமைப்புகள் ராஜபக்சேவின் கைக்கூலிகளாக மாறி வருகின்றன. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. தற்போது இலங்கையில் போர் முடிந்த பின்னர் தமிழர் பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் போய் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் தொடக்கம்

தமி‌ழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவா‌ய்ப்பு அலுவலகங்களையும் வலைப்பின்னல் மூலம் ஒருங்கிணைத்து வேலைவா‌ய்ப்பு பதிவுகளை ஆன்லைன் மூலம் பதிவு செ‌ய்து கொள்ளும் வசதியினையும், எம்பவர் என்ற புதிய இணையதளத்தினையும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்திலஇதுவரவேலைவாய்ப்பஅலுவலகங்களுக்கநேரிலசென்றுதானகல்விததகுதியைபபதிவசெய்முடியுமஎன்நிலஇருந்தவந்தது. தற்போதவேலைவாய்ப்புக்காபதிவசெய்தல், புதுப்பித்தலபோன்அனைத்துபபணிகளையுமவீட்டிலிருந்தபடியஆன்லைனிலசெய்தகொள்முடியும்.

இதற்காவேலைவாய்ப்புத்துறதனி இணையதளத்தஉருவாக்கியுள்ளது. இந்இணைதளத்ததுணமுதலமை‌ச்சரு.க.ஸ்டாலினஇன்றதொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கதொழிலாளரநலத்துறஅமைச்சர் த.ோ. அன்பரசனதலைமவகித்தார்.

ஏற்கனவவேலவாய்ப்பஅலுவலகங்களிலபதிவசெய்தவர்கள், இந்இணைதளத்திலதங்களதபதிவஎண்ணஉள்ளிட்டதங்களதகல்வி விவரங்களசரிபார்த்துககொள்முடியும். இதற்கமூன்றமாகாஅவகாசமவழங்கப்பட்டிருக்கிறது. பதிவிலமாறுபாடஏதேனுமஇருப்பினஅதனஉரிசான்றிதழ்களுடனவேலைவாய்ப்பகத்தநேரிலஅணுகி சரிபார்த்துககொள்ளலாம்.

புதிதாபதிவசெய்தகொள்விரும்புவோரதங்களதகல்விததகுதி, பிறப்பு, ஜாதிசசான்றிதழ்களஸ்கேனசெய்தஇந்இணையதளத்திலபதிவேற்றமசெய்வேண்டும். இணையதமுகவரி www.tnvelaivaaippu.gov.in

ஆன்லைனிலபதிவசெய்வதஎப்படி: இணையதளத்திலுள்படிவத்திலவிவரங்களநிரப்பி சான்றிதழ்களஸ்கேனசெய்தபடிவத்திலவிண்ணப்பித்தவுடனஒரதற்காலிபயனாளி அடையாளமமற்றுமஏற்புச்சொலவரும். தங்களவிண்ணப்பத்தினவிவரங்களசரியானவஎனில் 7 நாட்களுக்குளவிண்ணப்பமவேலைவாய்ப்பஅலுவலகத்திலஏற்கப்படும். பதிவஅடையாஅட்டையதாங்களஉருவாக்கி, தாங்களஅச்சிட்டவெளியஎடுத்துககொள்ளலாம்.

கூடுதலபதிவசெய்வதஎப்படி: ஆன்லைனகூடுதலதகுதிகளபகுதியகிளிகசெய்வேண்டும். தங்களகோரிக்கையவேலைவாய்ப்பஅலுவலகமஏற்றபினபுதிஅடையாஅட்டையஎடுக்கலாம்.

ஆன்லைனிலபுதுப்பிக்இயலுமா: ஆம். ஆன்லைனிலபுதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கஒரமுறபதிவாமாதத்திலுமதொடர்ந்தவருமஇரமாதங்களுக்குள்ளுமபுதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்காலத்தபுதுப்பிக்காதவர்கள் 18 மாதசசலுகையிலபுதுப்பிக்விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பமஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதஎப்படி அறிவது: தற்காலிகபபதிவஎண்ணை "பயன்படுத்துவோரஅடையாளமாகவும்" (username), பிறந்தேதியை, ஏற்புசசொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவினநிலையஅறியலாம்.

ஆன்லைனிலமுகவரி மாற்முடியுமா: ஆம். பதிவசெய்தவர்களதாங்களமுகவரியமாற்றிககொள்ளலாம்.

ஆன்லைனிலமுன்னுரிமைசசான்றினை (priority certificate) பதிஇயலுமா: முன்னுரிமைசசான்றுகள், எடுத்துக்காட்டாக, நிஎடுப்பபாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றிலமெய்த்தன்மஉறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகமுன்னுரிமைசசான்றுகளையுமஆன்லைனிலபதிஇயலாது. சான்றினநகல்களவிண்ணப்பத்துடனஅஞ்சலில/நேரிலவேலைவாய்ப்பகத்திற்கஅனுப்வேண்டும்.

இத்தளத்திலபதிவசெய்தகுதியானவரயார்: இத்தளத்திலதமிழ்நாட்டிலவசித்தவருபவரபதியலாம்.

இத்தளமமூலமபணி நாடுவோர்களுக்கஉள்வசதிகளயாவை: நேரிலபதிவு, நேரிலபதிவபுதுப்பித்தல், தகுதிகளஅதிகப்படுத்தல், அனுப்பப்பட்பதிவுக்காபதிவட்டஎடுத்தல், வேலைவாய்ப்பவிவரங்கள், பல்வேறதகுதிகளுக்காபரிந்துரவரம்புகளஅளித்தலஆகியவஉள்ளன.
நன்றி :வெப் துன்யா