ஆஸி. மாடல் அழகி கற்பழித்துக் கொலை

சிட்னியைச் சேர்ந்த பால் ராஜேந்திரன் என்பவர் மாடல் அழகியை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

மைஸ்பேஸ் இணையதளத்தின் மூலம் ஜேம்ஸ் கார்ட்டர் என்ற பெயரில், அந்த மாடல் அழகியை தனது வலையில் விழ வைத்தார் பால் ராஜேந்திரன். பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 வயதான அந்த அழகியை தனது அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்திற்கு வரவழைத்து அங்கு வைத்து கற்பழித்துக் கொலை செய்ததாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு முன்பு அந்த அழகிக்கு ராஜேந்திரன் அனுப்பிய இ மெயில்களில், தான் லா பெர்லா என்ற உள்ளாடை நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அதன் விளம்பரங்களில் நடிக்க வைக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி தனது வலையில் அவரை விழ வைத்தாராம்.

இந்த வழக்கை விசாரித்த டவுனிங் சென்டர் மாவட்ட கோர்ட் ராஜேந்திரன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

தீர்ப்பைக் கேட்டதும் பால் ராஜேந்திரன் கதறி அழுதார். பின்னர் அவருடைய வக்கீல், ராஜேந்திரனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை நீதிபதி டெபோரா பெயன் நிராகரித்து விட்டார்.

ஏப்ரல் 15ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று தண்டனை விவரம் வெளியிடப்படும்.

0 comments: