விமான பணிப்பெண் பயிற்சி நிறுவன மோசடி போலீசில் புகார்

சென்னையில் உள்ள விமான பணிப்பெண் பயிற்சி நிறுவனம் மீது, பணத்தை பெற்று மோசடி செய்து விட்ட தாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.சென்னை சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியில் ஏ.எச்.ஏ., ஏவியேசன் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இந்த நிறுவனத்தில் விமான பணிப்பெண் பயிற்சிக்காக நூற்றுக்கணக்கானோர் சேர்ந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் மூடப்பட்டதால், இதில் பணத்தை கட்டி ஏமாந்த மாணவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


இந்நிலையில், நேற்று முன்தினம் கடந்த 2008-09ம் ஆண்டில் பயிற்சியில் சேர்ந்து முடித்தவர்கள், தங்களை பயிற்சி நிறுவனம் மோசடி செய்து விட்டதாக ஒரு புகாரை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்தனர். இது குறித்து புகார்தாரர்கள் கூறியதாவது:விமான பணிப்பெண், கேபின் க்ரூ போன்ற பணிகளுக்கான பயிற்சி அளித்து, உடனடியாக பணி வாய்ப்பு பெற்று தருவதாகதெரிவித்தனர்.இதற்காக 1.60 லட்ச ரூபாய் செலுத்தினோம். ஆனால், விமான பணிப்பெண்ணிற்கான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை.


பயிற்சி அளிக்கப்பட்டதாக எழுதி வாங்கிக் கொண்டனர். இவர்கள் அளித்த பயிற்சிக்கான சான்றிதழுக்கு மதிப்பே இல்லை என்று, பணி வழங்கும் நிறுவனங்கள் சில தெரிவித்துள் ளன. இது குறித்து விசாரிக்க அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அந்த நிறுவனம் பூட்டப்பட்ட தகவல் கிடைத்தது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து, நேற்றும் 20க்கும் மேற்பட்ட விமான பணிப்பெண் பயிற்சி முடித்தவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

0 comments: