கல்லூரி மாணவி பலாத்காரம்

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் சில தினங்களுக்கு முன் காதலனை கட்டிப்போட்டுவிட்டு அவரின் காதலியை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது. அந்த 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 4 பேரில் 2 பேர் கேரள மாநிலம் விழிஞ்சம் மற்றும் பூவார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மற்ற 2 பேரில் ஒருவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இதில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவரும், கேரள நிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவரும் ஆட்டோ டிரைவர்கள். பூவாரையைச் சேர்ந்தவர் கார் டிரைவர். ஆட்டோ டிரைவர்கள் 2 பேரும் தேங்காய்பட்டணத்தில் ஆட்டோ ஓட்டி வந்தனர். அவர்கள் சவாரிக்கு காத்திருக்கும்போது கடற்கரைக்கு வரும் பெண்கள் மற்றும் காதல் ஜோடிகளை நோட்டம் போடுவார்கள். அவர்கள் தனியாக செல்வதை பார்த்து மற்றவர்களுக்கு போன் செய்து வரவழைப்பார்கள். பின்னர் 4 பேரும் அங்கு வந்து அவர்களை பின் தொடர்வார்கள்.

காதல் ஜோடிகள் தனிமையை தேடிச் செல்லும்போது காதலனை தனிமைப்படுத்தி பெண்ணை பலாத்காரம் செய்து வந்தனர். இந்த கும்பல் பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்றனர்.

0 comments: