நித்யானந்தாவுக்கு நெருக்கமான பெண் சீடரிடம் விசாரணை

நித்யானந்தாவுக்கு நெருக்கமான பெண் சீடர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த விடியோ வெளியானதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள தமிழகர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அவரது ஆசிரமம் மூடப்பட்டது. ஆசிரமத்தில் இருந்து ஏராளமான விஜபிக்கள் வெளியேறினர்.

இந்நிலையில் கொடைக்கானலில் சொகுசு விடுதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதி நித்யானந்தாவுக்கு சொந்தமானது என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொடைக்கானலைச் சேர்ந்த பெண் சீடர் ஒருவர், நித்யானந்தாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தனது கணவரை பிரிந்துள்ளதாகவும், கொடைக்கானலில் கட்டப்பட்டு வரும் சொகுசு விடுதிப் பற்றி போலீசார் அந்த பெண் சீடரிடம் விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

0 comments: