தவறான தீர்ப்புக்கு ஜனநாயக போராட்டம்...

பாபர் மஸ்ஜித் பற்றிய அலஹபாத் தீர்ப்பு குறித்த ஐ.என் டி .ஜே. நிலைப்பாடு தான் சரியானது என்ற நிலைக்கு சமுதாயத்தில் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது !

தொடர்ந்து சமுதாய இயக்கங்களின் , சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் கூட உயர் நீதி மன்ற முற்றுகை பற்றிய அறிவிப்பும், திருமாவளவன்,தேவநாதன் ,கிருஷ்ணசாமி ,மார்க்ஸ் உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்பதில் இருந்தும், பல் முனையில் இருந்தும் வரும் ஆதரவில் இருந்தும் 'பூனைக்கு மணி கட்டும்' போராட்ட அறிவிப்பின் மூலம் கட்டாய திருமண சட்டத்தை எதிர்த்து முதல் போராட்டத்தையும், குரான் எரிப்பை கண்டித்த போராட்டத்திலும் களம் கண்ட முதல் இயக்கம் எனும் பெருமையுடன் ,நன்மையில் முந்திக்கொண்ட நற்க்கூலியையும் இறைவனிடம் இருந்து இ.த.ஜ. பெற்று கொள்ளும்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் டி.என்.டி.ஜே. வின் செயற்குழுவும் அலஹபாத் தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி ௪-ல் போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.முதலில் எதிர்த்து, பின் உச்ச நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க போவதாக மன்னடி கூட்டத்தில் மடத்தனமாக கூறினாலும் தற்போதய மனமாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது!

அடுத்து த.மு.மு.க.,பாப்புலர் பிரான்ட் போன்ற இயக்கங்களும் தயக்கத்தை கைவிட்டு போராட்டங்களை அறிவிக்க வேண்டும் ! தமிழகத்தில் இ.த.ஜ. ஏற்றி வைத்த போராட்ட நெருப்பு இந்தியாவெங்கும் பற்றிப்பரவ வேண்டும். என இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் கேட்டுகொன்ன்டுள்ளார் .

0 comments: