தரத்தில் தாழ்ந்துவரும் தமிழ்ப்படங்கள் : இயக்குநர் மிஷ்கின்

தமிழ்ப்படங்கள் தரத்தில் தாழ்வுற்றிருப்பதாக இயக்குநர் மிஷ்கின் வருத்தப்பட்டார்.

செவன்த் சேனல் நிறுவனம் தொடர்ந்து 7-வது ஆண்டாக நடத்தும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஜெர்மன், பெல்ஜியம், போலந்து உள்ளிட்ட நாடுகளின் சிறந்த படங்கள் இதில் திரையிடப்படுகின்றன.


இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின்,

"தமிழில் தரம்தாழ்ந்த படங்களாகவே வரிசையாக இப்போது வந்துகொண்டிருக்கின்றன. இந்தத்தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது தமிழ் திரைப்படத்தின் தரம் கீழ் நோக்கி போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. . நான் இயக்கிய "அஞ்சாதே', "சித்திரம் பேசுதடி' ஆகிய படங்கள் தரம் தாழ்ந்த படங்கள்தான். என்ன செய்வது, வியாபாரத்துக்காகவும், ரசிகர்களைக் கவருவதற்காகவும் நல்ல சினிமாக்களில் சில விஷயங்களைத் திணிக்க வேண்டியிருக்கிறது.

சில விஷயங்களுக்காக இரண்டு படங்களிலும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்ட குத்துப்பாட்டைத் திணிக்கப் போய் என்னை 'குத்துப் பாட்டு ஸ்பெஷலிஸ்ட்' என்று சொல்லிவிட்டார்கள்" என்ற மிஷ்கின் "நல்ல படம் எது என்பதற்கு நான் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது" என்றும் கூறினார்.

விழாவில் பத்தி எழுத்தாளர் சாருநிவேதிதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர்.

0 comments: