கோவை என்கவுண்டர் எதிரொலி! சென்னை சிறுவனை கடத்தியவர்கள் கதறல்!

சென்னை: கோவை என்கவுண்டரில் மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேட்டதும் சென்னையில் சிறுவன் கீர்த்திவாசனை கடத்திய வழக்கில் பிடிபட்ட பிரபு, விஜய் இருவரும் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கோவையில் சிறுவர்களை கடத்தி வன்புணர்ந்து கொலைசெய்த மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இவர்கள் இரண்டு பேரிடமும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கோவை மோகன் கதி தங்களுக்கு வேண்டாம் என்று காவலர்களிடம் இருவரும் கதறி அழுதனர். இதனையடுத்து காவல்துறையினர் உறுதியளித்ததால் அழுவதை விட்டுவிட்டு முழு விசாரணைக்கு ஒத்துழைத்தனர்.

கடத்தலில் கிடைத்த ஒரு கோடி ரூபாய் பணத்துடன் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். விஜய், பிரபு இருவரையும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் இருவரையும் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

0 comments: