நிதி நெருக்கடியை சமாளிக்க ஜோதிடத்தை நம்பும் இத்தாலியர்கள்

சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக ஜோதிடம் மற்றும் மூட நம்பிக்கைகளில் இத்தாலியர்கள் பெருமளவு ஆர்வம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நுகர்வோர் சங்கத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றில் உள்ள தகவலின் படி, இத்தாலியர்கள் ஆண்டுக்கு பல மில்லியன் யூரோக்களை ஜோதிடர்களிடமும், எதிர்கால கணிப்பு சொல்பவர்களிடமும் செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரிகாரம் தேடி இத்தாலியர்கள் வங்கி மற்றும் ஆலோசகர்களிடம் செல்வதற்கு பதிலாக ஜோதிடர்களிடம் சென்றதே அதிகம் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தாலியின் தெற்கு பகுதியில் இந்த போக்கு அதிகளவு காணப்படுவதாக தெரிகிறது.

நுகர்வோர் சங்க அறிக்கையின் படி, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் தினசரி 20 முதல் 600 யூரோக்களை டாரட் கார்டு வாசிப்பாளர்கள், ஜோதிடக்காரர்கள், கணி சொல்பவர்கள் போன்றவர்களிடம் செலவழிக்கின்றனர்.

இந்த செலவைச் சுருக்கினாலே பெரும் நிதியை சேமிக்க முடியுமே இத்தாலியர்களே...!

0 comments: