திமுக பொதுக்குழுவில் SVசேகர்:ஸ்டாலின் கொடுத்த பேட்ஜ்

முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பாகக் கூடியது.
செயற்குழு, பொதுக்குழுவுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மத்திய, மாநில அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.வி.சேகர் திமுக ஆதராவாக செயல்பட்டுவந்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.எந்த கட்சியிலும் சேரவில்லை. கட்சி சாராத எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்ர்.
இந்நிலையில் அவர் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் பங்கேற்றூள்ளார். திமுக உறுப்பினர்கள் மட்டுமே பங்குபெறும் இந்த கூட்டத்தில் இவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ளது பெரும் பரபரப்புள்ளாகியிருக்கிறது. திமுகவில் இணையப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
எஸ்.வி.சேகர் எப்போதும் தேசியக்கொடியை சட்டைப்பையில் குத்தியிருப்பது வழக்கம். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு ஸ்டாலின் திமுக கொடியை கொடுக்கச்சொல்லவும் அதை குத்திக்கொண்டு பங்கேற்றுள்ளார்.

0 comments: