மலேசியாவில் கொல்லப்பட்டார் சென்னை பைனான்சியர்

சென்னையில் சினிமா பைனான்சியர் முத்துராஜா மலேசியாவில் கொல்லப்பட்டார். ஜனவரியில் மலேசியா சென்ற முத்துராஜா காணாமல் போன வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கணவர் திரும்பாததை அடுத்து மனைவி உஷாராணி மலேசிய போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் முத்துராஜாவை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று நண்பர்கள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து முத்துராஜா கொலை வழக்கில் மலேசியாவில் வழக்கறிஞர்கள் 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்ட வக்கீல்கள் சுரேந்திரன், பத்மநாபன் இருவரும் சகோதரர்கள் ஆவர். எனவே இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே மலேசியாவில் 4 பேரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

0 comments: