ஏ.டி.எம். மையங்கள் எண்ணிக்கை உயர்வு

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், ஏ.டி.எம். என்று அழைக்கப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா மையங்களின் எண்ணிக்கை 53,906 ஆக இருந்தது. இது, சென்ற ஆகஸ்டு மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்து 61,702 ஆக உயர்ந்துள்ளது.


ஒரு வங்கியின் வாடிக்கையாளர், இதர வங்கிகளின் சூஏ.டி.எம்' மையங்களையும் பயன்படுத்தும் வகையில் விதிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி தளர்த்தியது.

இதனையடுத்து, இதர ஏ.டி.எம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சென்ற ஆகஸ்டு மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 10.18 கோடியாக உயர்ந்துள்ளது.


இது, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் 5.68 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியால், பல வங்கிகள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதிதாக கிளைகளை தொடங்குவதுடன், ஏ.டி.எம். மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகின்றன.

நன்றி : நக்கீரன்


0 comments: