நீடாமங்கலத்தில் நின்று, சென்ற நாகூர் - கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்

நாகூரில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் நேற்று முதல் நீடாமங்லத்தில் நின்று சென்னை செல்லும் பயணிகளை ஏற்றி சென்றது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பங்கேற்று பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.நாகூரில் இருந்து சென்னைக்கு தினமும் கம்பன் எக்ஸ்பிரஸ் சென்று வருகிறது. நீடாமங்கலம், மன்னார்குடி போன்ற பெரிய நகராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னை செல்ல தஞ்சை சென்று பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.


நேற்று முதல் அந்த நிலை மாறி ரயில்வே முன்பதிவும், சென்னை செல்ல நீடாமங்கலத்திலேயே பயணம் செய்யும் வசதியும் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் தளிக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்றும், தளிக்கோட்டையில் இருந்து மன்னார்குடி வழியாக நீடாமங்கலம் வரை செல்லும் அரசு பஸ் ஒன்றையும் முன்னார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார்.நேற்று காலையில் அந்த பஸ்ஸில் அவர் நீடாமங்கலத்தில் இருந்து தளிக்கோட்டைக்கு பயணம் செய்தார்.

0 comments: