வளர்ச்சி பணிகளுக்கு ரூ.15 லட்சம் நிதி !

பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் திட்டக்குடி, நாட்டுச்சாலை, தம்பிக்கோட் டை வடகாடு வார்டுகளு க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.15 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஒன்றியக்குழு தலை வர் கூறினார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்கூட் டம் தலைவர் ரஞ்சனாதேவிமுருகப்பன் தலைமையில் நேற்று நடந் தது. ஆணையர் பானுமதி, வட்டார வளர் ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சசிகலா, மேலாளர் கூத்தரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் பிரபாகரன், அறிவானந்தம் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கனிமொழிராஜா பேசுகையில், தம்பிக்கோட்டைவடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் மருத்துவர் 5 நிமிடங்கள் மட்டுமே பணி செய்கிறார். இதை பல கூட்டங்களில் நான் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். பசுபதிநாகராஜன் பேசுகையில், திருமண உதவித்தொகை காசோலை வழங்கும் போது ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

பாலகிருஷ்ணன் பேசுகையில், ராஜாமடம் வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில் லை என்றார்.ஆரோக்கியசாமி பேசுகையில், வீரக்குறிச்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்க கணக்கெடுப்பு பணி முடிவடைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இன்னும் அடுப்பு வழங்கப்படவில்லை என்றார். அய்யப்பன் பேசுகை யில், கிருஷ்ணாபுரம் அக்ரஹாரத்திலிருந்து மயானத்திற்கு செல்லும் சாலை யை, தார்சாலையாக மாற்ற ரூ. 5 லட்சம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்.ஒன்றியக்குழுத் தலைவர் ரஞ்சனாதேவிமுருகப்பன் பேசுகையில், கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேராதது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன்.கிழக்கு கடற்கரை சாலையில் கருங்குளம் அருகில் உள்ள நசுவினி ஆற்றை கடற்கரை வரை தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாரினால் கரை ஓரங்களில் உடைப்புகள் ஏற்படாது என்றார். மேலும் திட்டக்குடி, தம்பிக்கோட்டை வடகாடு, நாட்டுச்சாலை வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 15 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.இதே போல் பொன்னவராயன்கோட்டையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், திலகம், மலர்க்கொடி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
முதல்வருக்கு நன்றி
கவுன்சிலர் முருகானந்தம் பேசுகையில், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாட்டுச்சாலை மற்றும் வெண்டாக்கோட்டையில் உள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும் என்றார். உமாமதியரசு பேசுகையில், அண்ணா விருது பெற்ற தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

0 comments: