சிறுவனுக்கு அவசரமாக இரத்தம் தேவை

10 வயது சிறுவன் இருதய சத்திர சிகிச்சைக்காக சென்னை மெரியட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டே சிகிச்சைக்கான நிதியை சேகரித்து அங்கு வந்துள்ளனர்.
தற்போது சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சிறுவனுக்கு அவசரமாக O Possitive fresh Blood ஏற்றப்பட வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ள சிறுவனின் தகப்பனுக்கு யாரிடம் போய் கேட்பது என்ன செய்வதென்று புரியாமல் உள்ளார்.
எனவே அல்லாஹ்வுக்காக இச்சிறுவனின் தேவையைப் பூர்த்தி செய்ய சகோதரர்கள் முன்வந்து இரத்த தானம் செய்து உதவுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.
சகோதரர்கள் அங்கிருக்கும் முஹம்மட் பைசல் எனும் சிறுவனின் தகப்பனுடன்
00918056127827
என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களால் முடியுமான உதவியைச் செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் சிறுவனின் சிகிச்சை வெற்றிபெற்று பூரண சுகமடைய அல்லாஹ்விடம் பிராத்திக்குமாறும் வேண்டுகிறேன்.

0 comments: