விரைவில் 8 புதிய ரயில்கள்

தமிழகத்தில் விரைவில் 8 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதுகுறித்த முழு விவரம்...

- நெல்லை - பிலாஸ்பூர் இடையே விரைவில் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து செவ்வாய்கிழமை தோறும் காலை 8.10 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் (2787) வியாழக்கிழமை காலை 5.05 மணிக்கு நெல்லையை வந்தடையும்.

இதேபோல், நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 12.15 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் (2788) மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 9.35 மணிக்கு பிலாஸ்பூரை சென்றடையும்.

- நெல்லை - ஹபா இடையே வாரம் இருமுறை ரயில் இயக்கப்படுகிறது. ஹபாவில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் (2998), ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு நெல்லையை வந்தடையும்.

இதேபோல், நெல்லையில் இருந்து திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் (2997), புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 2.10 மணிக்கு ஹபாவை சென்றடையும்.

- ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே வாரம் 3 முறை அதிவேக ரயில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சனி, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (2789), ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 4.05 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.

இதேபோல், கன்னியாகுமரி யில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் (2790), திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.

- கோவையில் இருந்து சோரனூர் இடையே ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வார நாட்களில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து தினமும் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரயில் (605), மதியம் 12.35 மணிக்கு சோரனூரை சென்றடைகிறது.

இதேபோல், சோரனூரில் இருந்து தினமும் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ரயில் (606), மாலை 5.30 மணிக்கு கோவையை வந்தடையும்.

இவை தவிர சோரனூர் - நிலாம்பூர், எஸ்வந்த்பூர் - கொச்சுவேலி, மட்கான் - எர்ணாகுளம், மங்களூர் - கொச்சுவேலி இடையேயும் வாராந்திர ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இவை தவிர 6 ரயில்களின் தூரத்தை ரயில்வே நீட்டித்துள்ளது.

அந்த விவரம்...

- மங்களூர் - சென்னை சென்டிரல் வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் புதுச்சேரி வரை நீட்டிக்கப்படுகிறது. இது
சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

- ஜம்முதாவி - மதுரை - ஜம்முதாவி வாரம் 2 முறை எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை செல்வதற்கு இணைப்பு ரயிலாக நீட்டிக்கப்படுகிறது. இது விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

- எர்ணாகுளம் - திருச்சி - எர்ணாகுளம் தினசரி எக்ஸ்பிரஸ் நாகூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் நிலையங்களில் நின்று செல்லும்.

- திருவனந்தபுரம் - எர்ணாகுளம் இடையே தினசரி இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு வரையிலும், யஸ்வந்த்பூர் - மங்களூர் சென்டிரல் - எஸ்வந்த்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணூர் வரையிலும், எர்ணாகுளம் - ஜெய்ப்பூர் - எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆஜ்மீர் வரையிலும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

0 comments: