சென்னை சிட்டி சென்டரில் சாகச நிகழ்ச்சி

சென்னைராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல வணிக வளாகமான சிட்டி சென்டரில் வெளிநாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபெறும் `த்ரபேஸியா -09' எனும் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியில் பல்கேரியா, ஹங்கேரி மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் - பெண்களும் கலந்து கொண்டு தங்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.ஹங்கேரியைச் சேர்ந்த ஸோலி மற்றும் ஸான்ட்ரா பங்குபெறும் ஏரியல் டான்ஸ் எனப்படும் அந்தரந்தில் தொங்குதல், ஹங்கேரி நாட்டின் கிங்கா ஷோ, பல்கேரியாவைச் சேர்ந்த இருவர் பங்கேற்கும் வண்ணமிகு நடனம், எகிப்தின் தனுரா நடனம் ஆகியவை இடம்பெறுகின்றன.சிட்டி சென்டருக்கு வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து வேறுவேறு நடனங்களாகவும், கலை நிகழ்ச்சிகளாகவும் நடத்தப்படும் என்று இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் அப்பாஸ் தெரிவித்தார்.
சிட்டி சென்டருக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்நிகழ்ச்சி கட்டணம் ஏதுமின்றி இலவசமாக, இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு ஷோ இப்போதுதான் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.தொடக்க நிகழ்ச்சியாக தங்களின் சாகசங்களை வெளிநாட்டுக் குழுவினர் செய்து காண்பித்தனர்.
சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் இயக்குனர் அப்துல்லா, சாகசம் நடத்தும் வெளிநாட்டு வீரர்-வீராங்கனைகள் உடனிருந்தனர்.

0 comments: