ஆஸியை வீழ்த்திய இந்தியா

நாக்பூரில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியி்ல் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. டோணி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாக்பூரில் நேற்று 2வது ஒரு நாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது.

முதலில் இந்தியா பேட் செய்தது. ஷேவாக் 40, கம்பீர் 76, யுவராஜ் சிங் 23 ரன்களைக் குவித்தனர். சச்சின் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

கேப்டன் டோணி ஆஸ்திரேலிய பந்து வீச்சை தவிடுபொடியாக்கி ரன்களைக் குவித்தார். 107 பந்துகளைச் சந்தித்த அவர் 124 ரன்களைக் குவித்தார். சுரேஷ் ரெய்னா தன் பங்குக்கு 62 ரன்கள் குவித்தார்.

இறுதியில், இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 354 ரன்களைக் குவித்தது.

இமாலய ஸ்கோரை துரத்தும் பணியை ஆஸ்திரேலியா தடுமாற்றத்துடன் தொடங்கியது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு வித்திட்டனர்.

வாட்சன் 19, பெய்ன் 8, பான்டிங் 12, காமரூன் ஒயிட் 23 எடுத்தனர். மைக் ஹஸ்ஸி மட்டும் தாக்குப் பிடித்து 53 ரன்களைச் சேர்த்தார். இறுதியில், 48.3 ஓவர்களி்ல் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலியா 255 ரன்களில் சுருண்டது.

ஆட்ட நாயகனாக டோணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த போட்டி டெல்லியில் 31ம் தேதி பகல் இரவு போட்டியாக நடைபெறும்.

டோணியின் சாதனைகள்..

நேற்றைய போட்டியில் சில சாதனைகளை நிகழ்த்தினார் டோணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்பது முதல் சாதனை.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த கேப்டன் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. முன்பு ஜெயசூர்யாவிடம் (122) இந்த சாதனை இருந்தது.

அடுத்து, ஆஸ்திரேலியா வுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் டோணிக்குக் கிடைத்தது. முன்பு பாகிஸ்தானின் கம்ரன் அக்மல் இதை வைத்திருந்தார்.

0 comments: