1.38 கோடி ரூபாயில் ஷாருக் மெழுகு சிலை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானின் முழு உருவ மெழுகுச் சிலையை ரூ.1.38 கோடி செலவில் லண்டன் அருங்காட்சியகத்தில் அமைத்துள்ளனர்.
லண்டனில் மாடேம் டஸ்சாட்ஸ் அருங்காட்சியகம் உள்ளது.


அங்கு சர்வதேச பிரபலங்களின் அச்சு அசலான மெழுகுச் சிலைகள் அமைக்கப்படுவது வழக்கம். சில தினங்கள் முன்பு அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செலி இருவரும் அருகருகே நிற்பது போன்ற மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.


பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ஷாரூக் கானின் முழு உருவ மெழுகுச் சிலை நேற்று திறக்கப்பட்டது. அதை ரூ.1.38 கோடி செலவில் அமைத்துள்ளனர். அமெரிக்க பயணத்தின் போது விமான நிலையத்தில் ஷாரூக் கானிடம் பாதுகாப்பு கெடுபிடிகள் நடத்தப்பட்டு, பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.

எனினும், அமெரிக்கா, லண்டனில் தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், அங்கு தொடர்ந்து பயணம் செய்வேன் என்று ஷாரூக் கான் சமீபத்தில் கூறியிருந்தார். பாலிவுட் திரையுலகில் அவரது அந்தஸ்தை உலகளவில் வெளிப்படுத்தும் விதமாக லண்டனில் மெழுகுச் சிலையாக நிற்கும் விஐபிக்கள் வரிசையில் ஷாரூக் இப்போது இடம்பிடித்துள்ளார்.

0 comments: