நவ்யா-சந்தோஷ் மேனன் திருமணம் நடந்தது!

நவ்யாவின் ஊரான ஹரிப்பாடு அருகே உள்ள செப்பாட் அரசு பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் இந்த திருமணம் நடந்தது.

இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு நவ்யாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரண்டிருந்தனர். நடிகர்கள் திலகன், சுரேஷ் கோபி, வினீத் போன்றோர் வந்திருந்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு மணமகன் சந்தோஷ் மேனனின் ஊரான செங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு மும்பையில் செட்டிலாகிறார் நவ்யா.

அதே நேரம் திரைப்படங்களில் நடிப்பதையும் தொடரவிருக்கிறாராம்.

0 comments: