போன் விளம்பரத்தில் நடிக்க அமீர்கானுக்கு ரூ.35 கோடி

பாலிவுட் நடிகர் அமீர் கான் செல்போன் நிறுவன விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய விளம்பர சந்தை வரலாற்றில் அதிகபட்ச சம்பளம் வாங்கியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.


ஐக்கிய அரபு குடியரசின் எடிசலட் தொலைபேசி நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, எடிசலட் நிறுவன விளம்பரத்தில் கான் தோன்றுவார். மூன்று ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்துக்கு ரூ.30 முதல் 35 கோடி வரை சம்பளம் கிடைக்கும். ஆண்டு சம்பளம் ரூ.10 கோடியைத் தாண்டி உள்ளது.


இதற்கு முன்பு, பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் விளம்பரத்தில் நடிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.6 முதல் 8 கோடி வரை சம்பளம் பெற்றதுதான் அதிகபட்சமாக இருந்தது. 3 இடியட்ஸ் பட வெற்றியால் அமீர், புதிய சாதனை படைத்துள்ளார். எனினும், சர்வதேச அளவில் கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் மற்றும் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.


0 comments: