விமான பணிப்பெண்ணிடம் செக்ஸ் குறும்பு

ஹாங்காங்கில் இருந்து மும்பைக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது.

இதில் டிசௌசா (வயது 56) என்பவர் பயணம் செய்தார். அவர் குடிபோதையில் இருந்துள்ளார். நடுவழியில் விமானம் வந்து கொண்டிருந்த போது டிசௌசா விமான பணிப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து செக்ஸ் குறும்பில் ஈடுபட்டார்.

அவரை தனது சீட்டுக்கும் இழுத்துள்ளார். உடனே மற்ற ஊழியர்கள் டிசௌசாவை கட்டுப்படுத்தியுள்ளனர். இதுபற்றி விமான நிலைய பாதுகாப்பு படைக்கும் தகவல் கொடுத்தனர்.

விமானம் மும்பையில் தரை இறங்கியதும் போலீசார் டிசௌசாவை கைது செய்தனர். அவர் மீது பெண்ணை மானபங்கம் செய்ததாக 354, 509 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

குடிபோதையில் அவர் அத்து மீறி நடந்து கொண்டாரா? என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதற்குள் மப்பு தெளிந்துவிட்டதில் மலங்க மலங்க விழித்துள்ளார் டிசௌசா.

0 comments: