17 வயது மாணவனுடன் ஓடிய 25 வயது ஆசிரியை

தன்னிடம் டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவனைக் காதலித்த 25 வயது டியூசன் டீச்சர் அவருடன் ஓடி விட்டார். இதையடுத்து போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
சென்னை முத்தையால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நஸிரீன். 25 வயதான இவர் எம்.காம் படித்துள்ளார். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தார். பலர் படித்து வந்தனர்.இவரிடம் டியூசன் படித்தவர்களி்ல் ஒருவர் 17 வயதேயான பிளஸ்டூ மாணவன் ஆண்ட்ரூஸ். பிளஸ்டூவை முடித்து விட்டு ஆண்ட்ரூஸ் கல்லூரியில் சேர்ந்தார்.டியூசன் படித்தபோது நஸிரீனுக்கும், ஆண்ட்ரூஸுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
வயது வித்தியாசம், மதம் ஆகியவற்றைக் காரணம் காட்டி திருமணத்திற்கு பெரும் தடை வரும் என்பதை உணர்ந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.2 மாதங்களுக்கு முன்பு இது நடந்தது. ஆண்ட்ரூஸ் இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்பதால், இன்னும் கல்யாணம் நடந்திருக்காது என்று தெரிகிறது. 21 வயதை எட்டியவுடன் திருமணம் செய்ய இருவரும் முடிவு செய்திருக்கலாம் என்றும் அதுவரை தலைமறைவாக இருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆண்ட்ரூஸின் தந்தை இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

0 comments: