விலை உயர்வால் வாங்க ஆளில்லை

இந்திய ஏலக்காயின் விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. விலை உயர்ந்ததால் வியாபாரிகள் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், சவூதி அரேபியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சீசனில் இந்தியாவில் 12 ஆயிரம் டன் ஏலக்காய் விளைச்சல் ஏற்பட்டது.

இதில் 700 டன் ஏலக்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு சீசன் ஜூன் மாதம் துவங்கியது. இந்த சீசனில் 8 ஆயிரம் டன் ஏலக்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. இதில் ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஜனவரி 1ம் தேதியன்று வண்டன்மேட்டில் நடந்த ஏலத்தில் 8 பருவட்டு உயர் ரக ஏலக்காய் கிலோ ஆயிரத்து 507 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 2002ம் ஆண்டு 8 பருவட்டு ஏலக்காய் கிலோ ரூ.ஆயிரத்து 225க்கு விலைபோனதுதான் இதுவரை அதிகபட்ச விலையாக இருந்தது.
ஏலக்காயின் வரலாறு காணாத விலை உயர்வு வியாபாரிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.


நிறுவனங்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. விலையேற்றம் சர்வதேச சந்தையிலும் எதிரொலித்தது.

அதனால் ஏற்றுமதியாளர்களும் ஏலக்காய் வாங்கி ஸ்டாக் வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் 8 பருவட்டு ஏலக்காய் விலை கிலோ ஆயிரத்து 280 ஆக சரிந்தது.
7 பருவட்டு ஏலக்காய் கிலோ ஆயிரத்து 100 ஆக உள்ளது. விலையில் ஏற்ற இறக்கத்தால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

0 comments: