2013ல் இந்திய ராக்கெட் நிலாவில் காலடி பதிக்கும்

திருச்சி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ஏ’’ற்கனவே அனுப்பப்பட்ட இந்திய ராக்கெட் சந்திராயன்-1 நிலாவில் தண்ணீர் இருப்பது பற்றியும் ரசாயன பொருட்கள் இருப்பது பற்றியும் ஆய்வு நடத்தியது.

இதை தொடர்ந்து நிலாவுக்கு ராக்கெட் ஒன்று அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக சந்திராயன்-2 ராக்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியா-ரஷிய கூட்டமைப்பில் தயாரிக்கப்படுகிறது.

திட்டமிட்டப்படி 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சந்திராயன்-2 நிலாவுக்கு அனுப்பப்படும் வெற்றிகரமாக நிலாவில் காலடி பதிக்கும் என்று பெரிதும் நம்புகிறோம்’’என்று தெரிவித்தார்.

0 comments: