கசாப் பாதுகாப்புக்கு ரூ. 35 கோடி செலவு

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மல் கசாபின் பாதுகாப்புக்காக, மகாராஷ்டிரா அரசு இதுவரை ரூ. 35 கோடி செலவு செய்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த ஒரு மனுவுக்கு அளித்த பதிலில், மகாராஷ்டிரா பொதுப் பணித்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.


மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் கசாபுக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறப்பு அறை, சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு செல்வதற்காக சுரங்கப் பாதை அமைக்க ரூ. 5.27 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளை பொதுப் பணித்துறை செய்தது. அதற்கான தொகையை மாநில உள்துறை அமைச்சகம் இதுவரை கொடுக்கவில்லை.


கசாபின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை, இந்தோ & திபெத் பாதுகாப்பு படையின் 255 வீரர்கள், மும்பை காவல் துறையின் 50 வீரர்களுக்கு ஆர்தர் ரோடு சிறையின் 20 போலீஸ் அதிகாரிகளுக்கு ஆன செலவுகள், நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு என இதுவரை ரூ.25 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

0 comments: