அவர்கள் ஜனநாயகத்தை கொலைச் செய்துள்ளார்கள்: அன்னா ஹஸாரே

புனே:தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறையில் பணியாற்றிய சதீஷ் ஷெட்டியைக் கொன்றதன் மூலம் அக்கிரமக்காரர்கள் கொலைச் செய்தது ஜனநாயகத்தை என்று சமூக சேவகர் அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

அஹ்மத் நகர் மாவட்டத்தில் ரலேகாவ் சித்தியில் கண் அறுவைசிகிட்சை முடிந்து ஓய்வெடுத்துவரும் ஹஸாரே செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். ஊழலுக்கெதிராக எந்தவொரு சமரசத்திற்கு இடம்கொடுக்காமல் கடந்த 7 வருடங்களாக அன்னாஹஸாரேயுடன் பணியாற்றிவந்த ஷெட்டி நேற்று முன் தினம் கொல்லப்பட்டார்.

ஷெட்டியை கொல்வது மட்டுமல்ல ஜனநாயகத்தின் ஆன்மாவையும் கொல்வதுதான் அவர்களது நோக்கம். அரசின் அதிகாரத்தில் செயல்படும் சிலரின் ரகசிய ஆதரவு இல்லாமல் இந்தக்குற்றம் நடந்திருக்க வாய்ப்பில்லை. கொலையைக் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று கூறும் ஷெட்டியின் குடும்பத்தினரின் கோரிக்கையை தானும் ஆதரிப்பதாக ஹஸாரே தெரிவித்தார்.

ஷெட்டியின் மரணம் அமைப்பிற்கு இழப்பு என்று மஹாராஷ்ட்ரா தகவல் அறியும் உரிமை துறை கமிஷனர் விஜய் குவலேகர் கூறினார். தகவல் அறியும் உரிமை த்துறையின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டால் சட்டத்தின் நோக்கம் தோல்வியுறும் என அவர் சுட்டிக்காட்டினார்.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments: