சிவசேனா மிரட்டல்-ஹெய்டன் உதறினார்-கில்கிறைஸ்ட் வரமாட்டார்

ஆஸ்திரேலிய அணியை மகாராஷ்டிராவில் ஆட விட மாட்டோம் என்று சிவசேனா விடுத்துள்ள மிரட்டலை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன் நிராகரித்துள்ளார். தான் ஐபிஎல்-3 போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனான கில்கிறைஸ்ட் சிவசேனாவின் மிரட்டல் கவலை தருவதாக கூறியுள்ளார். எனவே அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.


மார்ச் 12ம் தேதி ஐபிஎல் -3 போட்டித் தொடர் தொடங்குகிறது. இதில் கில்கிறைஸ்ட், ஹெய்டன், ரிக்கி பான்டிங், சைமணட்ஸ் உள்ளிட்ட 30 ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


2வது ஐபிஎல் தொடரின் சாம்பியனாக டெக்கான் சார்ஜர்ஸ் உள்ளது. இந்த முறையும் வென்று பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறைஸ்ட் ஆர்வமாக உள்ளார்.


ஆனால் சிவசேனாவின் மிரட்டல் தனக்கு கவலை தருவதாக அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், இந்தியாவில் விளையாடலாம் என பச்சைக் கொடி காட்டினால் தான் இந்தியாவுக்கு செல்வது குறித்து முடிவு செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


அதேசமயம், மாத்யூ ஹெய்ட்ன், ஜேசன் கிரெஸ்ஜா உள்ளிட்டோர் தாங்கள் இந்தியாவுக்கு வர தயங்கவில்லை என்று தெரிவிதுள்ளனர்.

0 comments: