மதுரை ஆதீனம் வருத்தம் தெரிவித்ததால் போராட்டம் வாபஸ்

திருச்சியில் கடந்த 16, 17, 18-ந்தேதிகளில் சங்கராச்சாரியாரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம், நாங்கள் உயிரினும் மேலாக கருதப்படும் நபிகள் நாயகம் பற்றி பேசும்போது, சங்கராச்சாரியார், நபிகள் நாயகத்தின் அவதாரமாக திகழ்கிறார் என்று பேசி இருக்கிறார்.

அல்லா என்ற வார்த்தை. புனிதமான வார்த்தை இதையும் அவர் பிரதிபலித்துள்ளார். இப்படி அவர் பேசியதால் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திவிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து 1-ந்தேதி ஆதீனம் மடம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு போலீசில் அனுமதி கேட்டோம். அன்று விழாக்காலம் என்று கூறியதால் மறுநாள் (2-ந்தேதி) காலை முற்றுகை போராட்டம் நடத்த இருந்தோம்.

இதை அறிந்த ஆதீனம் சென்னையில் உள்ள எங்களது தலைமைய கத்துடன் தொடர்பு கொண்டு நான் நபிகள் நாயகம் பற்றி ஏதும் குறை வாக பேசவில்லை என்று கூறி இருக்கிறார்.

ஆனால் எங்களிடம் சி.டி. ஆதாரம் இருந்ததால் நேற்று போலீஸ் அதிகாரியுடன் ஆதீனம் மடத்திற்கு சென்று அவரிடம் எடுத்து கூறி னோம். முதலில் மறுத்த அவர் பின்னர் வருத்தம் தெரிவிப்பதாக அவர் கைப்பட எழுதி தந்தார். இதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இனிமேல் தமிழகத்தில் கொள்கை ரீதியாக எந்த மதத்தவரும் நபிகள் நாயகம் பற்றி விமர்சித்து பேசினால் கடுமையான போராட்டம் நடத்துவோம்’’என்று கூறினார்.

0 comments: