
வி.ஐ.டி.யில் இன்று சனிக்கிழமை ரிவேரா 2010 கலைவிழா தொடங்கி பிப்ரவரி 2ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
இந்த ஆண்டு சர்வதேச அளவிலான ரிவேரா விழாவாக நடத்தப்படுகிறது. காலை 6 மணிக்கு காட்பாடி காந்திநகர் சில்க்மில் பகுதியில் இருந்து வி.ஐ.டி. வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சூழல் மற்றும் பசுமையை வெளிபடுத்தும் வகையில் கிரீன் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
இதில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றார்கள்.
காலை 9 மணிக்கு வி.ஐ.டி. வளாகத்தில் ரிவேரா-2010 கலைவிழாவை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமணன் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து வி.ஐ.டி.யில் உள்ள அரங்கங்களில் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு விதமான கலைதிறன் போட்டிகளும், வெளி மற்றும் உள் விளையாட்டு அரங்கங்களில் 20 கிரிக்கெட் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடக்கின்றன.
இன்று மாலை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. இதில் நடிகை சினேகா கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் பின்னணி பாடகி அனுக்ஷா பங்கேற்று பாடுகிறார்.
31ம் தேதி மாலை ஆங்கில ராக் இசைப்புகழ் மதர்ஜேன், பாலிவுட் பாடகர் ஷான், சிங்கபூர் புகழ் பயர் ப்ளயலஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 1ம் தேதி பிரிஸ்க் பேக்கூர் என்ற நடன நிகழ்ச்சி முன்னாள் இந்திய உலக அழகி பார்வதி ஓமன குட்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஸ்டைல் செக் எனும் அழகன்- அழகி போட்டி நடக்கிறது.
2ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் கமலஹாசன் பரிசுகளை வழங்கி பேசுகிறார். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வி.ஐ.டி. மாணவர்கள் என 18 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.
0 comments:
Post a Comment