கசாப்பை மீட்க முயன்ற லஷ்கர் இ தொய்பா

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக் கொண்ட அஜ்மல் கசாப்பை மீட்க பாகிஸ்தானிய லஷ்கர் இ தொய்பா சதியாளர்கள் முயன்றதாக அமெரிக்க கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்லி, ராணா மீதான குற்றச்சாட்டுப் பதிவின்போது சிகாகோ கோர்ட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் இதைத் தெரிவித்தனர்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினரிடம் கசாப் சிக்கிக் கொண்டதை அறிந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினர், தாஜ், டிரைடன்ட் ஹோட்டலில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தவர்களை விடுவிப்பதாகவும், கசாப்பை மட்டும் விட்டு விடுமாறும் இந்தியத் தரப்பிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்குள் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் இந்தியப் படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: