கின்னஸ் சாதனையில் இடம்பெறும் ரத்தினக் கல் புத்தர் சிலை

உலகின் மிகப் பெரிய ரத்தினக் கல்லால் ஆன புத்தர் சிலை, வியட்நாமில் அமைக்கப்படுகிறது.

வியட்நாமை சேர்ந்த சுரங்க நிறுவன அதிபர் டாவ் டிராங் குங். இவர் மியான்மரில் தோண்டி எடுக்கப்பட்ட மெகா ரத்தினக் கல்லை கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.9.2 கோடிக்கு வாங்கினார். அக்டோபரில் வியட்நாம் கொண்டு வந்தார். அதன் எடை 35 டன்.


அந்த ரத்தினக் கல்லில் பிரம்மாண்ட புத்தர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணியில் 50 சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, உலகின் மிகப் பெரிய ரத்தினக் கல் புத்தர் சிலை உருவாக உள்ள ரத்தினக் கல்லை வியட்நாம் அதிபர் நுயன் மின் டிரீத், திங்கட்கிழமை திறந்து வைத்தார். அந்த விழாவில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

புத்தர் சிலை உருவான பிறகு அந்த சிலையின் எடை 25 டன்னாக இருக்கும் என்று டாவ் டிராங் தெரிவித்தார்.

ரத்தினக் கல்லின் உயரம் 10 அடி, அகலம் 6.5 அடி. அதில் புத்தர் சிலை செதுக்கப்பட்டதும் கின்னஸ் சாதனையில் இடம்பெற விண்ணப்பிக்கப்படும் என்றார் டாவ் டிராங். 4 டன் எடையுள்ள ரத்தினக் கல்லில் 9 அடி உயரத்துக்கு உள்ள புத்தர் சிலைதான் இப்போது கின்னஸ் சாதனையிடம் இடம்பெற்றுள்ளது.

சிலையை செதுக்கி முடிக்க 2 ஆண்டுகள் ஆகும். எனவே, ரத்தினக் கல் மீது இப்போது பெயின்டில் புத்தர் உருவம் வரையப்பட்டுள்ளது.

தாமரை மீது தியான நிலையில் புத்தர் அமைந்திருப்பது போல அது இடம்பெற்றுள்ளது.

0 comments: