கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் தஞ்சையில் ஏப்., 14ம் தேதி துவக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் அன்னை சத்யா ஸ்டேடியத்தில் உள்ள குந்தவை நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி ஏப்ரல் 14 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டத்தின் கீழ் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் ஏழு வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இப்பயிற்சியில் வயது வரம்பின்றி அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.


16 வயதுக்கு உட்பட்ட மாண வ, மாணவிகளுக்கு 400 ரூபாயும், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 500 ரூபாயும் கட்டணமாக செலுத்தி நீச்சல் கற்றுக் கொள்ளலாம். காலை ஆறு முதல் நீச்சல் பயிற்சி வகுப்பு நடக்கும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

0 comments: