நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

சாமியார் நித்தியானந்தா கைதானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் நக்கீரனில் வெளியானதில் இருந்து தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா. மேலும் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் நித்யானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும், கர்நாடக காவல்துறையிடம் தமிழக காவல்துறை ஒப்படைத்தது. இதையடுத்து கர்நாடக போலீசார் நித்தியானந்த ஆசிரமத்தில் சோதனை செய்தனர். அப்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கைது செய்வதற்காக தேடிவருவதை அறிந்த நித்தியானந்தா, தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், நித்தியானந்தாவை கைது செய்வதில் பெங்களூரூ போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்யானந்த இருக்கிறாரா என்பதை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்தியானந்தாவை கைது செய்ய, இமாச்சலபிரதேச போலீசாரின் உதவியையும் நாடினர். இதையடுத்து தான், நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

0 comments: