கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரி மாணவி சாதனை

பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்று கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரி மாணவிசாதனை படைத்துள்ளார்.தமிழ்நாட்டில் பி.எட். கல்லூரிகளை ஒருங்கிணைப்பதற்காக 2008-09ல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில் தோற்றுவிக் கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் முதல் தேர்வு 2009 மே மாதம் நடந்தது.


இத் தேர்வில் கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியில் எம்.எட்., பயின்ற மாணவி ரேணுகாதேவி தஞ்சை மண்டலத்தில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஏப்.7ம்தேதி நடந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பல்கலைக்கழகம் சிறப்புப் பரிசு வழங்கியது. மாணவியை கல்லூரி தாளாளர் விஜயகுமார், முதல்வர் ராஜசேகரன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

0 comments: