ஏர்போர்ட்டில் ரூ.27 லட்சம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல்

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் கமிஷனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 13ம் தேதியன்று இரவு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து வந்த விமானப் பயணிகளை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் கிடந்த ஏழு பேக்கேஜ்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அவற்றில், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர் பாகங்கள், ஐபாட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மற்றொரு சம்பவத்தில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட கேமராக்களின் விலையை குறைத் துக் காட்டி, வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்தது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தைக் குறைத்து, வரி ஏய்ப்பு செய் யப்படுவதாக சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த அதிரடிச் சோதனையில், சையத் மூசா கடாரி என்பவருக்கு சொந்தமான பார்சலை, ஏர் கார்கோ பிரிவில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட் டனர். அதில், நிக்கான் டி90 என்ற உயர் திறன் கொண்ட கேமராக்கள் இருந்தன. ஆனால், அந்த கேமராக்களின் விலையை குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, அவற்றின் மீது விலை குறைந்த மாடலான நிக்கான் டி40 என்று போலியாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந் தன. இந்த வகையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பு குறைத்து காட்டப்பட்டிருப்பதும், அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ய முயற்சித் திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சையத் மூசா கடாரியை கைது செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments: