கரென்ட்' இல்லாமல் கஷ்டப்பட வேண்டாம்: கார் பேட்டரியை பயன்படுத்தலாம்

எலக்ட்ரிக் கார்கள், போக்குவரத்துக்கு மட்டுமின்றி, மின் தொகுப்புக்குத் தேவையான மின்சாரத்தையும் கொடுக்க வல்லவை என்பதை, அமெரிக்க வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவில், டெலவேர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வில்லெட் கெம்ப்டன் என்பவர், இந்த முறையை செயல்படுத்த வெகிக்கிள் டூ கிரிட் என்ற தொழில்நுட்பத்தை, 1997ல் கண்டுபிடித்தார்.



வருங்காலத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சக்திதான் உலகின் மாற்று மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தியாக இருக்கும். அப்போது இவ்வகைக் கார்கள் பெருமளவில் உதவும்' என்கிறார் கெம்ப்டன்.இவர், எலக்ட்ரிக் கார் பேட்டரியிலிருந்து, 10 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என கூறுகிறார். தற்போது, டொயோட்டா சியான் மாடல் கார்களை இது போன்று மாற்றியுள்ளார்.



டெலவேர் பல்கலையில் மூன்று கார்களும், டெலவேர் மாநில அரசுத் துறையில், நான்கு கார்களும் இந்த முறையில் இயங்குகின்றன.காரின் முன்பகுதி வழியே, மின்தொகுப்பில் இணைப்பு தரப்படும். இதன் மூலம் மின்சாரத்தைப் பெறவோ, வழங்கவோ இயலும். நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற, 'சார்ஜர்' நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



நம் பயன்பாட்டைத் தவிர்த்து, மிச்சமுள்ள மின்சாரத்தை, அந்த மின்தொகுப்பில் கொடுத்து விட்டு, அதற்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மின்மாற்று, இணையம் மூலம் கட்டுப்படுத்தப்படும்.தற்போது இந்த, 'வி2ஜி' தொழில்நுட்பம் பொருத்தப் பட்ட ஒரு காரின் விலை 36 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆனால், 'இவ்வகைக் கார்கள் அதிகளவில் உற்பத்தியானால் ஒரு காரின் விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை குறையும்' என்கிறார் கெம்ப்டன்.

0 comments: