நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் வலை

நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான விவகாரத்தில், ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், யாரும் ரஞ்சிதா மீது புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மனோகரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தபால் மூலம் புகார் அளித்தேன். ஆனால், கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிடுமாறு, கூறியிருந்தார்.

இந்நிலையில், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நித்தியானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து, ரஞ்சிதாவும் கைது செய்யப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: