சானியா திருமணம் நடைபெறவில்லை

சானியா-சோயிப்மாலிக் திருமணம் ஐதராபாத்தில் வரும் 15-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமையான இன்று உகந்தநாள் என்பதால் இன்றே திருமணத்தை நடத்தி விடுவது என்று திடீரென தீர்மானிக்கப்பட்டது. அதற்கான வேலைகளும் நடந்தன.

இந்த நிலையில் திடீரென சட்ட சிக்கல்கள் எழுந்தன.

சோயிப் மாலிக் வெளிநாட்டுக்காரர் என்பதால், அவர் தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும், தன் மீதான வழக்கு முடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், முதல் மனைவி ஆயிஷாவின் புகாரின்பேரில், போலீசார் சோயிப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, உள்ளூர் கோர்ட்டில் ஒப்படைத்து இருந்தனர்.

கோர்ட்டில் விண்ணப்பித்துத்தான், அந்த பாஸ்போர்ட்டை திரும்பப்பெற வேண்டும். அதற்கு கால அவகாசம் இல்லாததால், சோயிப் மாலிக் தனது பாஸ்போர்ட்டை திரும்பப்பெறவில்லை.

இதனால் இன்று திருமணத்தை நடத்த முடியவில்லை. எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, 15-ந் தேதிக்கு சானியா திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

0 comments: