ஏப்., 19ல் இலவச கண் சிகிச்சை முகாம்: மக்கள் பயன்பெற கலெக்டர் அழைப்பு

தஞ்சை மாவட்டத்தில் ஏப்ரல் 19ம் தேதி முதல் அனைத்து தாலுகாக்களிலும் குறிப்பிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்க உள்ளது. இம்முகாம்கள் காலை ஒன்பது முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும். ஏப்ரல் 19ம் தேதி ஒரத்தநாடு தாலுகா வாண்டையார்இருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 20ம் தேதி பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையம், மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையம், 22ம் தேதி பேராவூரணி தாலுகா செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம், மதுக்கூர் அடுத்த ஆலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.

23ம் தேதி சேதுபாவாசத்திரம் அடுத்த அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், 26ம் தேதி திருப்பனந்தாள் அடுத்த துகிலி ஆரம்ப சுகாதார நிலையம், 27ம் தேதி பூதலூர் அடுத்த செல்லப்பன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், 28ம் தேதி திருவோணம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் நடக்க உள்ள இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று கண் பரிசோதனை, கண் புரை நோயாளிகள் சிகிசசை பெறலாம், என கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டார்.

0 comments: