ஜுலை 4 ஒடுக்கபட்டோர் உரிமை மாநாடு சிறக்க அள்ளித்தாருங்கள்!

உங்களுடைய பூரண உடல் நலத்திற்கும் உயரிய ஈமானுக்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டுப் பணிகள் எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடந்து வருகின்றன. கடந்த கால அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு இம்மாநாட்டில் தவறுகள் முற்றிலும் ஏற்படாதவாறு இன்ஷா அல்லாஹ் கண்காணித்துக் கொள்ளவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு பணிகள் துரிதமுடன் நடந்து வருகின்றன. மாநாட்டில் 15 லட்சம் மக்கள் பங்குபெறுவதற்குள்ள அனைத்து முயற்சிகளும் இறைவன் அருளால் நடந்து வருகின்றன.


கும்பகோணம், வல்லம் மாநாடுகளுக்குத் தாங்கள் எடுத்துக கொண்ட முயற்சிகளைவிட இன்னும் வீரியமாக நம் சகோதரர்கள் மத்தியில் எடுத்துச் சென்று, இம்மாநாட்டின் அவசியத்தை விளக்கி, நம் சகோதரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவரும் கலந்;து கொள்வதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


இம்மாநாடு தமிழகத்துடன் நின்றுவிடாமல், இந்திய அளவில் ஆளும் வர்க்கத்தையும், சமூக ஆர்வளர்கள், வல்லுணர்கள், வெளிநாடு மற்றும் தாயகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் முழுமையாக ஈர்த்து, இந்த சமுதாயம் இனிமேலும் உறங்கத் தயாரில்லை, தகுந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றது என்று பறைசாற்றும் விதமாக இன்ஷா அல்லாஹ் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. இம்மாநாட்டை நாம் எதிர்பார்ப்பது போல் மிகச்சிறப்பாக நடத்துவதற்கு பெரும் பொருளாதாரம் அவசியமாக உள்ளது.


நாம் எடுத்துக்கொண்டுள்ள பெறும் முயற்சிக்கு நீங்கள் அளிக்கக் கூடிய பொருளாதார உதவிதான் மாநாட்டின் வலிமையை பறை சாற்றும். நாம் எந்த ஒரு வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தோ எந்தவித உதவியையும் பெறுவதில்லை என்ற கொள்கையை நியதியாகக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. ஆக இதன் உறுப்பினர்களும், ஆர்வலர்களும், அபிமானிகளும் கொடுக்கக் கூடிய பொருளாதார உதவியைக் கொண்டுதான் நமது ஜமாஅத் செயல்பட்டு வருகின்றது.

ஆகையால் கருணை உள்ளம் கொண்ட சகோதரர்கள் தங்களது பங்களிப்பை அடியிற்குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் பொருளாதார உதவியை அளித்து இம்மாநாடு இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். அல்குர்ஆன் 5-2

அனுப்பவேண்டிய முகவரி:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கணக்கு எண்; : 788274827. இந்தியன் வங்கி, மண்ணடி கிளை, சென்னை – 01

உங்கள் டி. டி மற்றும் மணியாடர்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாநில தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநில தலைமையகம்
30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை – 01
வஸ்ஸலாம்

குறிப்பு : நீங்கள் அனுப்பக் கூடிய உதவியை ஜூலை 4, மாநாடு என்று குறிப்பிடவும்

இப்படிக்கு
பொதுச் செயலாளர்
(9952035222)

நன்றி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

0 comments: