பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, கோவையில் இரண்டு மையங்களில் நேற்று துவங்கியது. பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி, கோவையில் பெர்க்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. ஏப்., 20ல் இப்பணிகள் முடிவடைகின்றன. பெர்க்ஸ் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி தலைமையிலும், நேரு வித்யாலயா பள்ளியில் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் இளங்கோ தலைமையிலும் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கின. ஸ்டேட் போர்டு தேர்வு விடைத்தாள்கள் கோவை ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் மாநகராட்சிப் பள்ளியிலும், மெட்ரிக் தேர்வு விடைத்தாள்கள் ஏ.எல்.ஜி., மெட்ரிக் பள்ளியிலும் நடைபெறுகிறது. மாவட்ட கல்வி அலுவலர் முருகன் மற்றும் அரசு தேர்வுகள் துறை துணை இயக்குனர் பாஸ்கரன் தலைமையில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன

0 comments: