ரஞ்சிதா - நித்யானந்தா செல்போன் உரையாடல்

நித்யானந்தா கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் இருக்கிறார். போலீசார் அவரிடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே நித்யானந்தா சம்பந்தப்பட்ட ஆபாச காட்சிகள் வெளியாக முக்கிய காரணமாக இருந்த அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பனை பெங்களூருக்கு வரவழைத்து போலீசார் வாக்குமூலத்தை பெற்று இருக்கிறார்கள்.

அடுத்ததாக நித்யானந்தாவுடன் ஆபாச காட்சியில் இருந்த நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆபாச காட்சிகள் வெளியான பிறகு நடிகை ரஞ்சிதாவின் சென்னை வீடு பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது.

இதையடுத்து கர்நாடக போலீசார் அவரை தேடிப்பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.

ரஞ்சிதாவுக்கு ஆசிரமத்தில் அதிக செல்வாக்கு இருந்துள்ளது. நித்யானந்தா அறைக்கு எப்போது வேண்டுமானாலும் அவர் சென்று வர விசேஷ அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பண விவகாரங்கள் மற்றும் ஆசிரமத்தில் மர்மமாக நடந்த அத்தனை விஷயங்களும் ரஞ்சிதாவுக்கு முழுமையாக தெரியுமாம். நித்யானந்தாவுக்கு எதிராக எதுவும் சொல்ல வேண்டாம் என்று ஆசிரமத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் அதற்காக பேரம் பேசப்பட்டு இருக்கலாம் என்றும் கர்நாடக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால்தான் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.


ரஞ்சிதாவை பிடித்து விசாரித்தால் நித்யானந்தா பற்றி மேலும் பல திடுக் கிடும் உண்மைகள் வெளிவரும் என்று போலீசார் நம்புகின்றனர். நித்யானந்தா உண்மைகளை மறுத்தால் அவரைப் பற்றிய மர்மங்களை ரஞ்சிதா மூலம் வெளிக்கொண்டு வருவோம் என்றும், இமாசலப்பிரதேசத்தில் நித்யானந்தா தங்கி இருந்த போது ரஞ்சிதாவுடன் 175 தடவை செல்போனில் பேசியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஞ்சிதா பதுங்கி உள்ள இடத்தை நெருங்கி விட்டதாகவும், ஓரிரு தினங்களில் பிடித்து விடுவோம் என்றும் கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments: