தஞ்சை தாலுகா, நகராட்சியில் இதுவரை 86,145 டிவிக்கள் வழங்கி அரசு சாதனை :மத்திய அமைச்சர் தகவல்

தஞ்சை தாலுகா மற்றும் நகராட் சியில் இதுவரை 86 ஆயிரத்து 145 இலவச டி.வி.க்களை வழங்கி அரசு சாதனை படைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் கூறினார்.தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் இலவச டி.வி. வழங்கும் விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் பிரபாவதி வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் துரை சந்திரசேகரன், மகேஷ்கிருஷ்ணசாமி, பஞ். தலைவர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இலவச டிவிக்களை வழங்கி பேசியதாவது:முதல்வர் கருணாநிதியின் சிறப்பு திட்டமான இலவச டி.வி வழங்கும் திட்டத்தில் தஞ்சை தாலுகா வில் உள்ள 78 கிராமங்கள் மற்றும் தஞ்சை நகராட்சியில் உள்ள 47 வார்டு களுக்கும் இதுவரை 86 ஆயிரத்து 145 டி.விக்கள் வழங்கப்பட்டுள்ளது. பிள்ளையார் பட்டி ஊராட்சியில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 27 சாலைப்பணிகள் ரூபாய் 43 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலும், 21 குடிநீர் திட்டப்பணிகளும், ரூபாய் 7 லட்சம் மதிப்பில் தெரு விளக்கு பணிகள் என்று பல சாதனைகள் நடந்து உள்ளது.


இந்நிலையில் இப்போது 2 ஆயிரத்து 254 பயனாளிகளுக்கு இலவச டி.வி வழங்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்க விவசாயிகள் தயங்கக்கூடாது. அப்போது தான் மழை வளம் நிலைத்து நிற்கும். இவ்வாறு பழனி மாணிக்கம் பேசினார். ஒன்றியக்குழு தலைவர் துரைராஜன், வேளாண் விற்பனைக்குழு தலைவர் செல்வம், மாவட்ட பஞ். உறுப்பினர் அருளானந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயராமன், கிராம கல்விக்குழு தலைவர் கோகுலகிருஷ்ணன் பெரியநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: