'ஹஜ்' பயணிகளுக்கு உணவு வழங்க வேண்டும்: இந்திய தவ்ஹித் செயலாளர் பேச்சு

ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம்களுக்கு உணவுகள் வழங்க, மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என, இந்திய தவ்ஹித் மாநில செயலாளர் செங்கிஸ்கான் பேசினார்.


ராமநாதபுரத்தில் தவ்ஹித் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முஷமிஹார் தலைமையில் நடந் தது. மாநில செயலாளர் ஜெங்கிஸ்கான் பேசியதாவது: 'ஹஜ்' புனித பயணம் மேற்கொள்ளும் முஸ் லிம்களுக்கு, உணவுகள் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் படி முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 13 ஆண்டுகளாக விசாரணை கைதிகள் என்ற பெயரில் சிறையிலுள்ள, அப்பாவி முஸ் லிம்களை விடுவிக்கவேண்டும்.


ராமநாதபுரம்-கீழக்கரை ரோட்டில் உள்ள ரயில்வே கிராசங்கில் மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும், என்றார். மாவட்ட செயலாளர் ஹசன்அலி, பொரு ளாளர் ஹாஜா, துணை தலைவர் சிராஜூதீன், துணை செயலாளர் ரஹித் அகமது ஆகியோர் பங்கேற்றனர்.

0 comments: