மின்தடையா? உடனடி தீர்வுகளுக்கு ஏப்.,24 ல் அதிகாரிகள் விளக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்தடையா? மின்வாரிய அதிகாரிகள் மூலம் உரிய தீர்வு கிடைக்க வேண்டுமா? பொது மக்கள் தயக்கமின்றி அதிகாரிகளுடன் கலந்துரையாடலாம். அதற்கான வாய்ப்புகளை ஏப்., 24 ல் ஏற்படுத்தி உள்ளனர் மின்வாரியத்தினர். பொது மக்கள் தவறாது கலந்து கொண்டு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கலாம். மாவட்டத்தில் மின் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் இருந்தாலும் பொது மக்கள் அதை உரிய நபர்களிடம் கேட்காமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாற்றமடைவது தொடர்கிறது. மின்சார்ந்த பிரச்னைகளை நேரிடையாக கேட்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் பலமுறை தெரிவித்தும் பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் யாரும் முன்வந்து தங்களது குறைகளை தெரிவிப்பதில்லை.

பொது மக்கள் மட்டுமின்றி உள்ளாட்சி பிரதிநிதிகளும் தாங்கள் சார்ந்த பகுதிகளில் மின் விளக்குகள் எரியாதது, மின் கம்பம் பழுதான நிலையில் உள்ளது, அறிவித்த மின்தடை நேரத்தைவிட கூடுதல் நேரத்தில் மின்தடை ஏற்படுவது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து குறைகளை தெரிவித்து சரிசெய்து கொள்ளலாம். இதற்காக மின்வாரியத்தினர் ஏப்.,24ல் காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துகின்றனர். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்களுடைய குறைகளை கூறி நிவர்த்தி செய்து கொள்ளலாம்

0 comments: