இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தரமாட்டோம்

இலங்கையிலும் ஆப்கானிலும் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. எனவே, இந்த நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் இனி அடைக்கலம் தரமாட்டோம் என்று ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் இதுகுறித்து, ’’இலங்கையில் போர் முடிவுற்றுவிட்ட நிலையில், அங்கு நிலைமை சீரடைந்துள்ளது. ஏற்கெனவே இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் தருவதை மற்ற நாடுகள் நிறுத்திவிட்டன.

தற்போது ஆஸ்திரேலியா அந்த நிலையை கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. எனினும், ஆப்கான் அகதிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா தான் முதன்முறையாக அடைக்கலம் தருவதை நிறுத்த முடிவு செய்துள்ளது’’ என்கிறார்.

0 comments: