ரூ.1.47 கோடி! மதிப்பிலான கேடமைன் போதைப் பொருள் பறிமுதல் இந்தோனேசியாவுக்கு கடத்த முயன்ற வாலிபர் கைது

Top world news stories and headlines detailசென்னையில் இருந்து இந்தோனேசியாவிற்கு கடத்த இருந்த 1.47 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14.78 கிலோ எடை கொண்ட கேடமைன் ஹைட்ரோ குளோரைடு என்ற போதைப் பொருளை சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார்.சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம் பூருக்கு புறப்பட இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை, சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்காணித்தனர்.இந்த விமானத்தின் மூலம் மலேசியா சென்று, அங்கிருந்து இந்தோனேசியா செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த மணி விஜயகுமார்(32) என்பவர், விமான நிலையத்திற்கு வந்தார்.


அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், அவருடைய பேக்கேஜ் களை சோதனையிட்டனர். அதில் சூட்கேஸ் ஒன்றில், சில ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஜார்கள் இருந்தன.விசாரணையில், அவற்றை விற்பனைக்காக எடுத்துச் செல்வதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்த நிலையில், ஐஸ்கிரீம் தயாரிப்பு ஜார்களை உடைத்துப் பார்த் தனர்.அப்போது, ஜார் களின் பக்கவாட்டு பகுதிகளில், 14.78 கிலோ எடை அளவுள்ள கேடமைன் ஹைட்ரோ குளோரைடு என்ற போதைப் பொருள், பிளாஸ்டிக் கவர்களில் பதுக்கி வைக்கப்பட் டிருந்தது தெரியவந்தது.


சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 1.47 கோடி ரூபாய். போதைப் பொருளை கைப்பற்றிய கஸ்டம்ஸ் அதிகாரிகள், மணி விஜயகுமாரை கைது செய்து விசாரித்தனர்.இக்கடத்தல் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் கமிஷனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை விமான நிலையத்தில், கேடமைன் போதைப் பொருள் குறித்து தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனை மற்றும் கைது சம்பவத்தை தொடர்ந்து கடந்த பல மாதங்களாக சென்னை வழியாக நடந்து வந்த கேடமைன் போதைப் பொருள் கடத்தல் தடைபட்டது.சென்னையில் இருந்த கெடுபிடி காரணமாக கேடமைன் போதை மருந்து கடத்தல்காரர்கள் கோவை மற்றும் டில்லி ஆகிய விமான நிலையங்கள் மூலம் கடத்தல் தொழிலை செய்து வந்தனர்.நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது சென்னை வழியாக கேடமைன் கடத்த முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்து, பறிமுதல் செய்துள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வேலையில்லாத கொடுமை: தமிழகத்தில், படித்து முடித்து வேலையின்றி திரியும் இளைஞர் களை குறிவைத்துள்ள சமூகவிரோத கும்பல், அவர் களை மூளைச் சலவை செய்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடுத்தி வருவது மணி விஜயகுமா ரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.வேலையில்லாமல் இருந்த மணி விஜயகுமார், பல ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, சதிக் கும்பலின் வலையில் வீழ்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை மட்டுமல் லாமல், தமிழகத்தின் பல் வேறு நகரங்களில் இருந்தும் படித்த இளை ஞர்கள் பலர், வெளிநாடுகளில் இருந்து கடத்தல் பொருட்களை கொண்டு வர ஈடுபட்டு வருகின் றனர்.

0 comments: