பேராவூரணி அரசு மகளிர் பள்ளி சாதனை

நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தஞ்சை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பேராவூரணி மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி புவனேஸ்வரி 1,153 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் தஞ்சை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி பவித்ரா 1,057 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவர் சூர்யா 1,052 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வெழுதிய 465 பேரில் 457 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் சந்திரசேகரன், பெற் றோர் ஆசிரியர் கழக கோவிந்தராசு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர். ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி: பேராவூரணி ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி கவிநயா 1,148 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் ஜெயசீலன் 1,139 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் அருண்குமார் 1,137 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.


ஜெயசீலன், ராதிகா, அருண் குமார் ஆகியோர் கணிதத்தில் 200 மதிப் பெண், கவிநயா, ஜெயசீலன் ஆகியோர் வேதியியலில் 200 மதிப்பெண், மாணவி நிவேதா தமிழில் 191 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தாளாளர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் கணபதி, ராமு, பிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர் கள் பாராட்டினர். திருச் சிற்றம்பலம் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.


வெற்றிப் பெற்ற மாணவர்களை தாளாளர் வேதநாயகி மற்றும் இயக்குனர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். பேராவூரணி மூவேந்தர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது. வெற்றிப் பெற்றவர்களை பள்ளித் தாளாளர் வக்கீல் சாமியப்பன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாராட்டினர். பேராவூரணி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சதீஷ் 1,017 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் சந்தோஷ்முருகன் 1,007 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் கண்ணதாசன் 987 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.


பெருமகளூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவி விஜி 854 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி சித்ரா 823 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் பிரசன்னா 796 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

0 comments: